
இந்தியா-நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் துவங்கியது. நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய அணி 53 ரன் விதயாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா கூட்டணியை நியூசிலாந்து பந்து வீச்சாளர்களால் அவ்வளவு எளிதில் பிரிக்க முடியவில்லை. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். அவர்களது பந்துகளை சிக்சர், பவுண்டரி என சிதறடித்தனர்.
இந்திய அணி 16.2 வது ஓவரில் 158 ரன்களை எடுத்து இருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 80 ரன்களில் (52 பந்துக்கள், 10 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அவுட் ஆனார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்.இதனையடுத்து,ரோகித் சர்மாவுடன், கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். வீராட்டும் இரண்டு சிக்சர்களை விளாசினார். மறுமுனையில் சதம் நோக்கி விளையாடிய ரோகித் சர்மாவும் 80 ரன்களில் அவுட் ஆனார்.
18.6 வது ஒவரில் இந்தியா 185 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் பவுல்ட் பந்து வீச்சில் லாதமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 55 பந்துக்களை எதிர்க்கொண்ட ரோகித் சர்மா 6 பவுண்டர்கள் மற்றும் 4 சிக்சர்களை அடித்து அசத்தினார். விராட் கோலியுடன் கை கோர்த்த டோனியும் சிக்சருடன் ஆட்டத்தை தொடங்கினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கப்தில் மற்றும் முன்ரோ ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறினர்.
இதனையடுத்து ஆட வந்த கேப்டன் வில்லியம்சன் சிறிது நிலைத்து நின்று ஆட, ஹர்திக் பாண்டியா பிடித்த அருமையான கேட்ச் ஒன்றில் ஆட்டமிழந்தார். பின்னர் களத்திற்கு வந்த புரூஸ் 140 ரன்களிலும், க்ரந்தோம் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்.
இறுதியில், அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் சஹல், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
நியூசிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்ததுடன், தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ரோகித்சர்மா. நியூசிலாந்துக்கு எதிராக நேற்று அவர் 4 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் ரெய்னாவை முந்தி அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
20 ஓவரின் அனைத்து வகையான போட்டிகளிலும் சேர்த்து
- ரோகித்சர்மா 268 சிக்சர்கள் 257 போட்டியில் அடித்துள்ளார்.
- ரெய்னா 259 ஆட்டத்தில் 265 சிக்சர்கள் அடித்துள்ளார்.
சர்வதேச அளவில் அனைத்து வகையான டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த் வீரர்கள் பட்டியல் :
- கிறிஸ் கெய்ல் – 772 சிக்சர், 309 ஆட்டம்
- கெய்ரோன் பொல்லார்ட் – 490 சிக்சர், 297 ஆட்டம்
- பிரெண்டன் மெக்கல்லம் – 399 சிக்சர், 297 ஆட்டம்
- டிவைன் ஸ்மித் – 347 சிக்சர், 306 ஆட்டம்
- டேவிட் வார்னர் – 314 சிக்சர், 238 ஆட்டம்
- சேன் வாட்சன் – 200 சிக்சர், 238 ஆட்டம்
- ரோகித் சர்மா – 268 சிக்சர், 257 ஆட்டம்
- சுரேஷ் ரெய்னா – 265 சிக்சர், 259 ஆட்டம்