அணியில் இருந்து கலட்டி விடப்பட்டிருக்கும் யுவராஜ் சிங் அணியில் இடம் பிடிக்க இன்னும் தனது ஆட்டத் திறனை மேம்படுத்த வேண்டும் என் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரொகித் சர்மா அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடயேயான ஒருநாள் போட்டிகளில் சென்னையில் வரும் 17ஆம் தேதி துவங்குகிறது. அதில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி : விராத் கோலி ( கேப்டன்), ரோகித் சர்மா, சிகர் தவான், கே.எல் ராகுல், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், அஜிங்க்யா ராகானே, எம்.எஸ். தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் அப்டேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சகால், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமர், உமேஷ் யாதவ், முகமது சமி
இந்த அணியிலும் யுவ்ராஜ் சிங்க் இல்லாதது, அவரது உடல் தகுதியின்மையையே சுட்டிக் காட்டுகிறது.
தேசிய கிரிக்கெட் அகாடமியில் வைக்கப்படும் ‘யோ-யோ’ பிட்னஸ் டெஸ்ட்டில் தோல்வி அடைந்ததே யுவராஜ் ன் வெளியேற்றத்திற்காண காரணம் ஆகும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடயேயான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் இடம் பெறவில்லை,
யுவராஜ் சிங் தற்போது ஓய்வில் இருக்கிறார் என தேர்வுக்குழு தலைவரால் அறிவிக்கப்பட்டாலும் இந்தியாவின் அணியில் அவருக்கு மீண்டும் இடம் கிடைக்குமா என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மீண்டும் மீண்டும் எழுந்த வண்ணம் தான் உள்ளது.
தற்போது ஆஸ்திரலியாவுடனான் பயிற்சி ஆட்டத்தில் ஆடும் 14 பேர் கொண்ட அணி அற்விக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கேள்விகள் கொழுந்தி விட்டு எரியத் துவங்கியுள்ளது. இந்தியாவின்
அந்த போர்டு பிரெசிடென்ட்ஸ் அணியிலும் அவர் பெயர் இடம் பெறவில்லை. மேலும் , துலீப் ட்ராபிக்கான மூன்று அணியிலும் அவரது பெயர் இல்லை.
இதன் மூலம் யுவராஜ் சிங், இந்திய அணியின் 15 பேர் மற்றும் துலீப் ராபியின் மூன்று அணியில் உள்ள 45 பேர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆடும் 14 பேர் என எதிலும் அவர் பெயர் இல்லை.
இதனால்,தற்போது இந்திய நாட்டின் தலைசிறந்த முதல் 74 வீரர்கள் பட்டியலில் கூட யுவராஜ் சிங் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
இதற்க்கான காரனம் அவரது உடல் தகுதியே என கூறப்படுகிறது,
இதனைப் பற்றி பி.சி.சி.ஐ அதிகார் ஒருவர் பேசியபோது,
யுவராஜ் சிங்கின் உடல் தகுதி தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. பயுற்ச்சியாளர் ரவி சாஷ்திரியும் கேப்டன் விராத் கோலியும் மீண்டும் மீண்டும் அணிக்கு உடல் தகுதி தான் முக்கியம் என்பதனை நினைவுபடுத்தி வருகின்றனர்.
ரோகித் சர்மா சமீப காலமாக யுவராஜ் சிங்கை பிந்தொடர்ந்து வந்து காலாய்த்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் யுவ்ராஜ் சிங்க் த்னது இன்ஸ்டகிராம் பக்கத்தில் மேல் சட்டை இல்லாம்ல் தனது படத்தைப் பதிவிட அந்த படத்தில் வந்து அவரை கலாய்த்தார் ரோகித்.
A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on Aug 21, 2017 at 7:18am PDT
தற்போது ஒரு மொபைல் கம்பெனி விளம்பரத்திற்காக அந்த போனுடன் ஒரு படத்தை பதிவிட்டர் யுவராஜ் சிங், அந்த படத்திலும் வந்து தனது வேளையைக் காட்டிவிட்டர் ரோகித் சர்மா.