மீண்டும் இந்தியாவுக்காக களமிறங்கிறேன் ! வலைப்பயிற்சி வீடியோவை வெளியிட்ட சச்சின் ! 1

இந்தியாவில் தற்போது இங்கிலாந்து – இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-1 என முன்னிலையுடன் இறுதி டெஸ்டில் விளையாடி வருகிறது. மறுபுறம் முன்னாள் வீரர்கள் கலந்துகொள்ளும் 2021 சாலை பாதுகாப்பு உலகத் தொடர் இன்று (மார்ச் 5) முதல் தொடங்குகிறது.

இந்த தொடரில் சர்வதேச அணிகளின் முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளார்கள். இதில் சச்சின், விரேந்திர சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், பிரெட் லீ, பிரைன் லாரா, உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  

சச்சின், சேவாக் கலந்துக் கொள்ளும் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது..,! 2

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த தொடர் கொரானா காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்தாண்டு நடத்த திட்டமிட்டு அதற்கான  அட்டவணையை பிசிசிஐ அறிவித்திருக்கின்றனர். இந்த தொடரில் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கிறது.

இன்று தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகிறது. இந்த போட்டி மாலை 7 மணியளவில் சத்தீஸ்கரில் உள்ள ஷாகித் வீர் நாராயன் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணியின் முன்னாள் வீரர்கள் வலைப்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சச்சின், சேவாக் கலந்துக் கொள்ளும் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது..,! 3

இந்நிலையில், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த தொடரில் அவர் விளையாட போவது குறித்து ட்விட் செய்திருக்கிறார். அந்த ட்விட்டில் சச்சின் “நான் மீண்டும் இந்திய அணிக்காக களமிறங்குவது மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தியாவுக்காக விளையாடுவதில் பெருமை மற்றும் சாலை பாதுக்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் இந்த தொடர் நடத்தப்படுகிறது” என்று ட்விட் செய்துள்ளார். மேலும் சச்சின் இந்த சாலை பாதுகாப்பு தொடருக்கான வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *