வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்தது இந்தியா.. 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து, இந்திய அணி தொடரையும் இழந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்கில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்க்ஸில் 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஹசீம் ஆம்லா 61 ரன்கள் எடுத்து கைகொடுத்தன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, கோஹ்லி (41) மற்றும் ரஹானேவின் (48) பொறுப்பான ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து, தென் ஆப்ரிக்கா அணிக்கு 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு எல்கர் 86 ரன்களும், ஆம்லா 52 ரன்களும் எடுத்து நல்ல துவக்கம் கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள், இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 177 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்ரிக்கா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
https://twitter.com/iamkhurram12/status/957257581885407234