இந்திய கேப்டன் கோஹ்லியை சிறுத்தையுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் வீரர் அக்தர்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், சிறுத்தையுடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, கோஹ்லி அசத்தல் சதம் அடித்து கை கொடுத்ததன் மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான கோஹ்லியை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Another super run-chase by @imVkohli. When it comes to chases it’s either him or a Cheetah. Well done!! Hope youngsters pick this trait of @imVkohli
— Shoaib Akhtar (@shoaib100mph) February 2, 2018
அந்த வகையில் கோஹ்லியை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அசுர வேக பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் “இன்னொரு சூப்பர் விரட்டலைச் செய்துள்ளார் விராட் கோலி. இலக்கை விரட்டுவதில் கோலி ஒரு சிறுத்தை. வெல் டன். இளம் வீரர்கள் கோலியின் இந்தத் தன்மையை அவரிடமிருந்து கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.