இந்திய - தென்னாப்பிரிக்க தொடருக்கான 15 பேர் கொண்ட டி20 அணி அறிவிப்பு! முற்றிலுமாக புதிய அணி கட்டமைப்பு! 1

செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்திய சுற்றுப்பயணத்திற்காக டெஸ்ட் அணியின் கேப்டனாக ஃபஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் டி20 அணியில் இடம் பெறவில்லை. 

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளனர். இந்த செப்டம்பர் 15ஆம் தேதி துவங்க உள்ள இந்த டி20 போட்டிகள் அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடக்கும்.

தென் ஆப்பிரிக்க அணியின் உலக கோப்பை தோல்வி தொடர்ந்து பாப் டு பிளெஸ்ஸிஸ் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குவிண்டன் டீ காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய - தென்னாப்பிரிக்க தொடருக்கான 15 பேர் கொண்ட டி20 அணி அறிவிப்பு! முற்றிலுமாக புதிய அணி கட்டமைப்பு! 2

 

இந்தியா தொடருக்கான தென்னாப்பிரிக்கா டி20 அணி:

குயின்டன் டி கோக் (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், பவுமா, ஜூனியர் தலா, ஜார்ன் ஃபோர்டுயின், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி, ஜான்-ஜான் ஸ்மட்ஸ்

 

தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்ததால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை, 2023-ல் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை கட்டமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது.

அதன்படி டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக மட்டும் டு பிளிசிஸ் தொடர முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய - தென்னாப்பிரிக்க தொடருக்கான 15 பேர் கொண்ட டி20 அணி அறிவிப்பு! முற்றிலுமாக புதிய அணி கட்டமைப்பு! 3
LONDON, ENGLAND – JUNE 23: Quinton de Kock of South Africa batting during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Pakistan and South Africa at Lords on June 23, 2019 in London, England. (Photo by Andy Kearns/Getty Images)

இந்நிலையில் டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு டெம்பா பவுமா துணைக் கேப்டனாகவும், டி20 அணிக்கு டஸ்சன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பைக்குப் பின் தென்ஆப்பிரிக்கா அணி முதலாவதாக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது டி காக் கேப்டனாக செயல்படுவார்.

தென் ஆப்பிரிக்கா அணி உலக கோப்பை தொடரில் படுமோசமாக தோல்வி அடைந்தது இந்த தோல்விக்கு பின்னர் அந்த அணியின் கேப்டன்  டு பிளசிஸ் தோல்விக்கான காரணங்களாக பலவற்றைக் கூறினார். குறிப்பாக இந்தியாவில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடியதே எங்களது தோல்விக்கு காரணம் என்று ஆணித்தரமாகக் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *