இலங்கை அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு 1

ஜிம்பாப்வே அணியுடன் இலங்கை அணி படு தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை அணியின் கேப்டன் ஆங்கிலோ மேத்யூஸ் தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தற்போது இலங்கை கிரிக்கெட் சங்கம் புதிய கேப்டனை அறிவித்து உள்ளார்கள்.

இலங்கை அணியின் புதிய கேப்டன்கள் :

இலங்கை அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு 2

இலங்கை அணியின் டெஸ்ட் கேப்டனாக தற்போது தினேஷ் சந்திமால் நியமனம் செய்து உள்ளார், பிறகு உபுல் தரங்க இலங்கை அணியின் ஒரு நாள் கேப்டனாகவும் டி20 கேப்டனாகவும் நியமித்து உள்ளார்கள்.

இலங்கை அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு 3

எனவே இந்த மாதம் இறுதியில் மோதும் இந்தியா இலங்கை போட்டிகள் கொண்ட தொடரில் தினேஷ் சந்திமால் மற்றும் உபுல் தரங்க தான் கேப்டனாக செயல் பட உள்ளார்கள்.

இலங்கை அணியின் கேப்டனாக மேத்யூஸ் செய்தது :

இதுவரை மேத்யூஸ் இலங்கை அணியின் கேப்டனாக 34 டெஸ்ட் போட்டியில் தலைமை தங்கியுள்ளார் இதில் இலங்கை அணி 13 டெஸ்ட் போட்டியில் வெற்றியும் 15 டெஸ்ட் போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது.

ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனாக மேத்யூஸ் 47 போட்டிகளில் தன் அணிக்கு வெற்றியும் 46 தோல்விகளையும் வாங்கியுள்ளார். டி20 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் கொடுத்து உள்ளார்.

ஜிம்பாப்வே அணியுடன் தோல்வி அடைந்த பிறகு மேத்யூஸ் பேசியது :

இலங்கையில் சுற்றுபயணம் செய்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 3-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. ஒருநாள் கிரிக்கெட் அணிகள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கும் அணியான ஜிம்பாப்வேயிடம் இலங்கை தொடரை இழந்தது பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு 4

இந்நிலையில், தோல்விக்கு பின்னர் பேட்டியளித்த இலங்கை அணி தலைவர் மேத்யூஸ், இந்த தோல்வியை ஜீரணிப்பது கடினமாக உள்ளது என கூறியுள்ளார்.

நேற்றைய போட்டியில் டாஸ் போட்டதிலிருந்து பின்னர் நடந்த எல்லா விடயங்களும் தங்கள் அணிக்கு எதிராகவே அமைந்ததாகவும், ஆனாலும் தோல்விக்கு சாக்கு கூற விரும்பவில்லை எனவும் மேத்யூஸ் கூறியுள்ளார்.

இந்த தொடர் முழுவதும் இலங்கை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்ததாகவும், ஆனால் நேற்றைய முக்கிய போட்டியில் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாததால் 203 ஓட்டங்களே எடுக்க முடிந்தது என மேத்யூஸ் கூறியுள்ளார்.

கத்துகுட்டி அணியுடன் தோல்வியடைந்ததால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வாரா என மேத்யூஸிடம் கேள்வி கேட்கப் பட்டது.

அதற்கு பதிலளித்த மேத்யூஸ், இது குறித்து இன்னும் யோசிக்கவில்லை எனவும் அதை பற்றி யோசிக்க தனக்கு கால அவகாசம் தேவை எனவும் கூறியுள்ளார். இது சம்மந்தமாக தெரிவு குழுவினருடன் பேச வேண்டும் எனவும் மேத்யூஸ் தெரிவித்தார்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *