இந்தியா இலங்கை டெஸ்ட் : மைதானத்தில் பெண்கள். விளக்கம்? 1

மோசமான காலம் :

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நல்ல காலமே இல்லை போலும். அடிக்கு மேல் அடியாக வாங்கி கொண்டு வருகிறது.கடந்த இரு சீசனில் பலத்த அடி வாங்கி தற்போது வரை அடி வாங்கி வருகிறது.  ஆஸ்திரேலியா அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ததில் இருந்து ஆரம்பம் ஆனது இந்த அடி வாங்கும் படலம்.

இந்தியா இலங்கை டெஸ்ட் : மைதானத்தில் பெண்கள். விளக்கம்? 2
Indian batsman Shikar Dhawan plays a shot during the first day of the first Test match between Sri Lanka and India at Galle International Cricket Stadium in Galle on July 26, 2017. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

ஆஸ்திரேலியா உடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் சொந்த மண்ணில் முதன் முறையாக 3 – 0 என்ற கணக்கில் மன்னைக் கவ்வியது.

அடி மேல் அடி :

பின்னர் 2017ஐ தென்னாப்பிரிக்கா உடன் ஒரு நாள் தொடரை 5 – 0 என்ற கணக்கில் மறுபடியும் மொதல்ல இருந்தா என தொடங்கி இன்னும் அந்த சனி அவர்களை விட்ட பாடில்லை. அதே இடத்தில் வைத்து டி20 போட்டியிலும் 3 – 0 என்ற கணக்கில் நசுக்கப்பட்டது. மேலும் பங்களாதேஷ் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு இலங்கைக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும் வென்று அந்த அணிக்கு சோகத்தை ஏற்ப்படுத்தியது. அது போக சாம்பியன்ஸ் டிராபி முதல் சுற்றிலேயே வெளியே வந்தது.

சமீபத்தில் ஜீம்பாப்வே அணியுடனான 5 போடிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-2 என்ற வெற்றிக் கணக்கில் தோற்றது. அதன் பிறகு கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது. இவ்வளவு களைபரங்களுக்கு இடையில் தற்போது ஒரு சர்ச்சைக்குரிய விசயத்தை செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். அதுதான் மைதானத்தில் வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க பெண்களை பயன்படுத்திய விவகாரம்.

சர்ச்சை :

இந்திய இலங்கையில் சுற்றுப்  பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் 5 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா இலங்கை டெஸ்ட் : மைதானத்தில் பெண்கள். விளக்கம்? 3

போட்டியின் இடையே விடப்படும் இடைவேளையின் போது வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க பெண்களை பயன்படுத்தியது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

ஏற்கனவே பலத்த காயத்தில் இருக்கும் இலங்கை அணியை உற்சாகமாக இருக்க வைக்க இம்முயற்ச்சி மேற்கொள்ள பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது “மைதானம் பார்பதற்கு ஆழகாக இருக்க வேண்டும் ” எனவே இது போன்ற முயற்சியில் இறங்கியிள்ளோம் என அந்த அதிகாரி தெரிவித்தார். 

ஒரு நாள் தொடரிலும் :

இம் முயற்சி டெஸ்ட் தொடரில் மட்டும் இல்லை ஒரு நாள் தொடரிலும் பெண்களே வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க அனுப்பபடுதாக தெரிவித்தார் அந்த அதிகாரி. மேலும் அவர் கூறுகையில், வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க பெண்களை பயன்படுத்தியது.

இந்தியா இலங்கை டெஸ்ட் : மைதானத்தில் பெண்கள். விளக்கம்? 4

இது முதன் முறையாக அல்ல. இதற்கு முன்னர் 1938 இல் ஹெட்டிங்லீயில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியிலும் தேநீர் கொடுக்க பெண்களை பயன்படுத்தியது இங்கிலாந்து என சுட்டிக்காட்டினார் அவர்

 

கிரிக்கெட்டில் முன்னேற்றம் ஏற்படுமா என அனைவருக்கும் இருக்கும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளித்துள்ளது. இலங்கை பெண்கள் கிரிக்கெட் தேர்வில் வீராங்கனைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் வேலையில் இது தேவைதானா என பார்த்து செயல் பட வேண்டும் இலங்கை கிரிக்கெட் வாரியம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *