இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ரிஷப் இடத்திற்கு இவர் வந்தாச்சு!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஆடவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. இதனை அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜனவரி மாதம் இந்திய அணி ஆடவிருக்கிறது.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து வெளியேறிய துவக்க வீரர் ஷிகர் தவான் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷவர் குமார், தீபக் சஹர் இருவரும் காயம் காரணமாக வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு ஷரத்துல் தாகூர், நவதீப் சைனி இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். பும்ராஹ் காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்திருக்கிறார்.
தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்டிற்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ரிஷப் மீண்டும் சோதப்பினால், கண்டிப்பாக சஞ்சு சாம்சன் உள்ளே எடுத்துவர அதிக வாய்ப்புக்கள் உள்ளது. விண்டீஸ் எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முக்கிய கட்டத்தில் பண்ட் ஆட்டமிழந்தார். இதனால், கடும் விமர்சனத்திற்க்கு உள்ளானார்.
இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல்:
விராத் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட்(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் டுபே, யூசுவேந்திர சஹல், குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், நவதீப் சைனி மற்றும் ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரிட் பும்ரா.