இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள்: தேவையில்லாத சாதனையை படைத்த இந்திய அணி 1

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவன் டக்-அவுட்டாக, 2 ரன்களில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் டக்-அவுட்டானார். மணீஷ் பாண்டே 2, ஹார்திக் பாண்டியா 10, புவனேஸ்வர் குமார் பூஜ்ஜியம் ரன்களில் வெளியேறினர்.

இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள்: தேவையில்லாத சாதனையை படைத்த இந்திய அணி 2
MS Dhoni of India bats during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசர பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவன் டக்-அவுட்டாக, 2 ரன்களில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, பின்னர் வந்த தினேஷ் கார்த்திக்கும் டக்-அவுட்டானார். மணீஷ் பாண்டே 2, ஹார்திக் பாண்டியா 10, புவனேஸ்வர் குமார் பூஜ்ஜியம் ரன்களில் வெளியேறினர்.

இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள்: தேவையில்லாத சாதனையை படைத்த இந்திய அணி 3
Kuldeep Yadav of India bats during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017
Photo by Deepak Malik / BCCI / Sportzpics

சற்று தாக்குபிடித்த குல்தீப் யாதவும் 19 ரன்களில் ஆட்டமிழக்க, பும்ராவும் டக்-அவுட்டாக, தோனி அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். மொத்தம் 87 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரி, 2 இமாலய சிக்ஸர்களின் உதவியுடன் 65 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இதன்காரணமாக இந்திய அணி 38.2 ஓவர்களில் 112 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தரப்பில் அற்புதமாக பந்துவீசிய லக்மல் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

தேவையற்ற சாதனை:

இந்தியா vs இலங்கை, முதல் ஒருநாள்: தேவையில்லாத சாதனையை படைத்த இந்திய அணி 4
Suranga Lakmal of Sri Lanka appeal successfully against Rohit Sharma Captain of India during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்த போட்டியின் போது 16 ரன்னில் இருக்கும் போது தனது ஐந்தாவது விக்கெட்டை பறிகொடுத்தது இந்திய அணி. இதனால், குறைந்த ரன்னில் ஐந்து விக்கெட்டை இழந்து இந்திய அணி தேவையில்லாத சாதனையை படைத்தது.

இதற்கு முன்பு, 1983 உலகக்கோப்பையின் போது ஜிம்பாப்வே அணியுடன் இந்திய அணி 17 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்தது. ஆனால், கபில் தேவின் அதிரடி ஆட்டத்தால் அவர் 175 ரன் அடிக்க, அந்த போட்டியை இந்திய அணி வென்றது. அந்த போட்டியை வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், 1983 உலககோப்பையையே இந்திய அணி வென்றது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *