தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் கடந்த 5ம் தேதி துவங்கியது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு, டிவில்லியர்ஸ்(65), மற்றும் டூ பிளசிஸ் 62 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்த தென் ஆப்ரிக்கா அணி ஆல் அவுட்டானது.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியில், ஹர்திக் பாண்டியாவை(93) தவிர மற்ற வீரர்கள் தென் ஆப்ரிக்காவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் வந்த வேகத்தில் நடையை கட்டியதால் 209 ரன்கள் மட்டுமே எடுத்தபோது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி வெறும் 130 ரன்னில் ஆல் அவுட்டான, தென் ஆப்ரிக்கா அணி, இந்திய அணிக்கு 208 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள், தென் ஆப்ரிக்கா வீரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல், அவர்களை விட மிக வேகமாக வந்த வேகத்தில் நடையை கட்டியதால் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இந்த மோசமான தோல்வியின் எதிரொலியாக, இந்திய அணி மீது பல்வேறு தரப்பினரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரும் தனது பங்கிற்கு இந்திய அணியை விளாசி தள்ளியுள்ளார்.
முதல் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் “இந்திய அணி ஒன்றும் பயிற்சி போட்டியில் விளையாடிய வில்லை. இந்திய அணி இவ்வளவு மோசமாக விளையாடும் என்று சிறிதும் நினைக்கவில்லை”.
இந்திய அணி வீரர்கள் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதில் இன்னும் நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள வெண்டும். ஆஸ்திரேலிய மண்ணில் சொதப்பியது போலவே தென் ஆப்ரிக்காவிலும் தவான் Short Ballஐ எதிர்கொள்ள முடியாமல் சொதப்பி வருகிறார். கோஹ்லி தனகான பலவீனத்தை அறிந்து கொண்டு அதனை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.