இந்திய அணிக்காக தொடரை வெல்லுவார் நெஹ்ரா - சுரேஷ் ரெய்னா 1
Cricket, India, Australia, Ashish Nehra, Suresh Raina www.hdnicewallpapers.com

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அறிவித்துள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனால், அவரது சொந்த ஊரான டெல்லியில் விளையாடிவிட்டு ஓய்வு பெற போவதாக தெரிவித்தார்.

நியூஸிலாந்து அணியுடன் விளையாடிய பிறகு ஓய்வு பெற்றதும், மேலும் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடமாட்டேன் என்றார். இதனால் அவருடைய 18 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது.

ஆஷிஷ் நெஹ்ராவின் ஓய்வை பற்றி பேசிய போது ஐதராபாத்தில் இந்திய அணிக்காக நெஹ்ரா தொடரை வென்று தருவார் என சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

“அவர் மிகவும் நல்ல மனிதர், இந்த விளையாட்டுக்காக கடினமாக உழைப்பார். அவரை சில முறை சந்தித்தேன் மற்றும் நாங்கள் பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம். 38 வயதிலும் சிறப்பாக விளையாடுகிறார். ஐதராபாத்தில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்காக தொடரை வென்று தருவார்,” என சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் சென்று கொண்டிருந்த பஸ் மீது கல் வீசி தாக்குதல் செய்தார்கள். அதை பற்றியும் ரெய்னா பேசினார்.

“அவர்கள் நன்றாக விளையாடும்போது இது மாதிரி செய்வது அசிங்கமாக இருக்கிறது. இதை பற்றி பிசிசிஐ நினைக்கும் என்று நினைக்கிறன். நாம் ஒன்றாக தான் ஐபில்-இல் விளையாடுகிறோம். நல்லவேளை, யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை. இனி இது போல் .தவறுகள் நடக்காது என நம்புகிறேன்,” என சுரேஷ் ரெய்னா கூறினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *