தங்களது அணியில் இருந்து விரட்டப்பட வாய்ப்புள்ள ஐந்து மிக முக்கிய வீரர்கள் !! 1

பிசிசிஐயின் உத்தரவின்படி 2021 ஐபிஎல் போட்டி ஜனவரி 20-ஆம் தேதிக்குள் அந்த அணி அவர்களின் வீரர்களின் பட்டியலில் வெளியிடும்படி தெரிவித்துள்ளது, இதன் அடிப்படையில் பிப்ரவரி 6ஆம் தேதி ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற உள்ளது. இதனை பற்றிய உறுதியான தகவல் அடுத்த மாதத்தில் தெரியும், என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனது அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட முக்கியமான ஐந்து வீரர்கள் பற்றியும் காண்போம்.

சுரேஷ் ரெய்னா.

தங்களது அணியில் இருந்து விரட்டப்பட வாய்ப்புள்ள ஐந்து மிக முக்கிய வீரர்கள் !! 2


சென்னை அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடவில்லை. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சின்னத் தல என்று செல்லமாக அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கடந்த சில போட்டிகளில் மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக இவர் சென்னை அணியில் இருந்து கைவிடப் பட்டார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது, இவர் ஐபிஎல் போட்டியில் 5,369 ரன்கள் அடித்து அதிகமான ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இருக்கும் ரெய்னாவை சிஎஸ்கே அணி 2008இல் 11 கோடி கொடுத்து இதற்கு முன் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


லசித் மலிங்கா.

தங்களது அணியில் இருந்து விரட்டப்பட வாய்ப்புள்ள ஐந்து மிக முக்கிய வீரர்கள் !! 3
Hyderabad: Mumbai Indians (MI) player Keiron Pollard lifts Lasith Malinga on his shoulders as they celebrate their win over Chennai Super Kings (CSK) at the Indian Premier League 2019 final cricket match at Rajiv Gandhi International Cricket Stadium in Hyderabad, Sunday, May 12, 2019. (PTI Photo/R Senthil Kumar)(PTI5_12_2019_000398B)


ஐபிஎல் போட்டியில் நட்சத்திர வீரராக வலம் வந்த லசித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார் 2019 ஐபிஎல் சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை வீசி மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார்.


ஒரு அணியில் 8 வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி இருக்கும் பட்சத்தில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி கழட்டி விட்டதாக தெரிவித்தது, மேலும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங் கோச் ஆக செயல்படுவார் என்றும் அறிவித்து இருந்தது.


அஜிங்கியா ரஹானே

தங்களது அணியில் இருந்து விரட்டப்பட வாய்ப்புள்ள ஐந்து மிக முக்கிய வீரர்கள் !! 4


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஆக இருந்த ரஹானே சரியாக விளையாடாததால் அந்த அணியில் இருந்து டெல்லி கேப்பிடல் அணிக்கு இடம்பெயர்ந்தார். கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கூட இவர் 9 போட்டிகளில் பங்கேற்று 113 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அந்த அணியின் தலைமை இவர்மீது அதிருப்தியில் உள்ளது. இவருக்கு பதிலாக வேறு ஏதும் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்களா என்று காத்துக் கொண்டுள்ளது.


தினேஷ் கார்த்திக்.

தங்களது அணியில் இருந்து விரட்டப்பட வாய்ப்புள்ள ஐந்து மிக முக்கிய வீரர்கள் !! 5


கொல்கத்தா அணியின் கேப்டனாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக் கடந்த மூன்று வருடங்களாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.2020 இல் நடந்த ஐபிஎல் போட்டியில் இவர் தனது கேப்டன் பதவியைத் துறந்து இயான் மார்கனிடம் அப்பொறுப்பை கொடுத்தார்.

இந்நிலையில் 7.4 கோடி எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்தி அந்த அணியில் இருந்து இந்த வருடம் கழட்டி விடப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்டீவ் ஸ்மித்.

தங்களது அணியில் இருந்து விரட்டப்பட வாய்ப்புள்ள ஐந்து மிக முக்கிய வீரர்கள் !! 6


ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் 2020 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார். இவர் அந்த போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை 12 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் வெறும் 311 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக இவர் இந்த ஆண்டு அந்த அணியில் இருந்து கைவிடப்படவுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *