பேசாம டி20 மட்டும் ஆடசொல்லுங்க.. இனிமேலும் ஓடிஐ டீம்ல சூரியகுமார் யாதவ் எதுக்கு? என கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் - டக்கர் பதில் சொன்ன ரோகித் சர்மா! 1

அடுத்தடுத்து இரண்டு கோல்டன் டக் அவுட்டான சூரியகுமார் யாதவிற்கு இனியும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் இருக்கிறதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ரோகித் சர்மா கொடுத்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் நாயகனாக திகழ்ந்துவரும் சூரியகுமார் யாதவ், அதன் தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் 4வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பதால், சூரியகுமார் யாதவிற்கு பிளேயிங் லெவனில் குறைவாகவே இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாத நேரங்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

பேசாம டி20 மட்டும் ஆடசொல்லுங்க.. இனிமேலும் ஓடிஐ டீம்ல சூரியகுமார் யாதவ் எதுக்கு? என கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் - டக்கர் பதில் சொன்ன ரோகித் சர்மா! 2

தற்போது ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பதால் அவரால் காலவரையின்றி விளையாடமுடியாது என்று கூறப்பட்டது. ஆகையால் சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் ஆடுகிறார்.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பிளேயிங் லெவனில் இருந்தார். முதல் போட்டியில் களமிறங்கிய முதல் பந்திலேயே மிட்ச்சல் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ மூலம் அவுட்டானார். இரண்டாவது போட்டியிலும் அச்சுபிசகாமல் அதேபோல மீண்டும் மிட்ச்சல் ஸ்டார்க்கிடம் முதல் பந்தில் வெளியேறினார். இரண்டு போட்டிகளிலும் வந்த முதல் பந்தலிலேயே கோல்டன் டக்காகி வெளியேறியதால் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார் சூரியகுமார் யாதவ்.

பேசாம டி20 மட்டும் ஆடசொல்லுங்க.. இனிமேலும் ஓடிஐ டீம்ல சூரியகுமார் யாதவ் எதுக்கு? என கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் - டக்கர் பதில் சொன்ன ரோகித் சர்மா! 3

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவுற்றவுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மாவிடம் சூரியகுமார் யாதவ் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இனியும் அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்புகள் கொடுக்கப்படுமா? என்று கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதில் கூறிய ரோகித் சர்மா:

பேசாம டி20 மட்டும் ஆடசொல்லுங்க.. இனிமேலும் ஓடிஐ டீம்ல சூரியகுமார் யாதவ் எதுக்கு? என கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர் - டக்கர் பதில் சொன்ன ரோகித் சர்மா! 4

“ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது வருவார் என்று தெரியாது. மிடில் ஆர்டரில் இடம் காலியாக இருக்கிறது. அதில் சூரியகுமார் யாதவை மட்டுமே விளையாட வைக்க முடியும். முந்தைய போட்டிகளில் தனது திறமையை சூரியகுமார் யாதவ் காட்டியுள்ளார். ஆகையால் அவரது திறமைக்கு ஏற்றவாறு இன்னும் கூடுதல் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.”

“அவருக்கும் நன்றாக தெரியும், மீண்டும் நல்ல மனநிலைக்கு வந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என உணர்ந்திருப்பார். அவருக்கு முந்தைய தொடர்களில் உரிய வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால் கிடைக்கும் வாய்ப்புகளில் ஒரு சில தவறுகள் இருந்தாலும் இன்னும் கூடுதல் வாய்ப்பை கொடுக்க வேண்டும். சரியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று திறமையான வீரே ஒருபோதும் நினைத்து விடக்கூடாது.”

“சூரியகுமார் யாதவிற்கு 7-8 போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தால் அவரிடம் ரன்களை எதிர்பார்க்கலாம். அவர் இப்போது நல்ல பார்மில் தான் இருக்கிறார். ஆனால் இப்போது மாற்றுவீராக மட்டுமே விளையாடி வருகிறார். ஆகையால் அவரிடம் இருந்து தொடர்ச்சியான ஆட்டத்தை அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அடுத்தடுத்த தொடர்களில் நிறைய போட்டிகள் விளையானால், அவரிடம் இருந்து எதிர்பார்போம். இப்போதைக்கு ஷ்ரேயாஸ் கண்டிஷன் தெரியும் வரை சூரியகுமார் அணியில் இருப்பார்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *