கடந்த டி.20 உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, படு மோசமான தோல்விகளால் லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறியது. இதனால் இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் பிசிசிஐ., பெரும் முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த தொடரில் செய்த தவறுகளை மீண்டும் செய்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி, சீனியர் வீரர்களை விட சமீபகாலமாக இளம் வீரர்கள் பலருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் பல்வேறு விதமான தொடர்களிலும் விளையாட வைத்து உலகக்கோப்பை தொடர்க்கு தேவைப்படும் வீரர்களை தேர்ந்தெடுப்பதிலும் இந்திய அணி முயற்சி செய்து வருகிறது
என்னதான் இந்தியாவின் நிர்வாகம் பல்வேறு விதமான முயற்சிகளை செய்து வந்தாலும் வீரர்களுக்கு ஏற்படும் திடீர் காயங்கள் ஒட்டுமொத்த திட்டத்தையும் பாதிக்கிறது.
அந்த வகையில் எதிர்வரும் உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக அணியிலிருந்து விலகவுள்ள 3 வீரர்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.அப்படி ஒருவேளை அவர்கள் விலகும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட 3 வீரர்கள் குறித்து இங்கு காண்போம் ….
கே எல் ராகுல் .
இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விண்டிஸ் அணிக்கு எதிரான லிமிடெட் ஓவர் தொடரில் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக விளையாட முடியாமல் போய்விட்டது.
இவருக்கு ஏற்கனவே முதுகு தண்டிலும் காயம் ஏற்பட்டுள்ளதால் இவர் இந்திய அணியின் மருத்துவக் குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறார். ஒருவேளை இவருடைய காயம் அதிகமாகும் பட்சத்தில் நிச்சயம் உலகக்கோப்பை தொடரில் இவருக்கான இடம் பறிபோய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.