திருப்பத்தூரில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர், அதன்மீது போலீஸார் எடுத்த நடவடிக்கை குறித்து புகார் தாரரிடம் கருத்துக் கேட்கும் நடைமுறையை அம்மாவட்ட எஸ்.பி விஜயகுமார் தொடங்கியுள்ளார்.
புகார் தாரர் கூறும் கருத்தின் அடிப்படையில் வழக்கைக் கையாண்ட போலீஸ் அதிகாரிக்கு வாழ்த்துகள் அல்லது முறையான அறிவுரைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பிலிருந்து ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி விஜயகுமார் கூறுகையில், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட 72 மணி நேரத்தில் அவர்களை தொடர்பு கொண்டு முறையாக புகார் ஏற்கப்பட்டதா? அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என்று அவர்களிடம் கருத்து கேட்கப்படும்.
புகார் அளித்தவர்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் குடிமக்கள் மீதான போலீசாரின் பொறுப்பும், அக்கறையும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவைக் குறிப்பிட்டு இந்திய அணியின் கிரிக்கெட் வீரர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேனுமான சுரேஷ் ரெய்னா, “திருப்பத்தூர் காவல்துறையின் இந்தத் திட்டம் ஒரு பிரமாதமான தொடக்கம். இது கண்டிப்பாக காவல்துறையினர் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், குடிமகன்களுக்காக அவர்கள் பொறுப்புடன் செயல்படுவதையும் உறுதி செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.
Tirupathur SP Dr. P. Vijaya Kumar, IPS talks about the Feedback Cell set up by District Police, @sp_tirupathur
The feedback mechanism is increasing responsiveness & upholding the accountability of police towards citizens #PublicService #GoodJobCop #IPSInnovates#COVID19 pic.twitter.com/oSg1Ju4t7n
— IPS Association (@IPS_Association) June 1, 2020
Wonderful initiative by @sp_tirupathur. This will surely enable the police to work on refining the processes further & be more reaponsive towards the citizens. https://t.co/tssW7536Iy
— Suresh Raina?? (@ImRaina) June 1, 2020
ரெய்னாவின் இந்தப் பாராட்டு நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கும் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.