இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி அசால்டாக வெற்றி பெறும் என முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற சவுதாம்டன் மைதானத்தில் வரும் 18ம் தேதி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்காகவும், அதன்பின் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிரமாக பயிற்சியும் எடுத்து வருகின்றனர். அதே போல் மறுபுறம் கிட்டத்தட்ட டி.20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைக்கு இணையாக பார்க்கப்படும் இந்த இறுதி போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இறுதி போட்டிக்கான தங்களது ஆடும் லெவனையும், கணிப்பையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசால்டாக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தும் என கருதுகிறேன். இறுதி அதிக ரன்கள் குவித்த வீரராக நியூசிலாந்து அணியின் டீவன் கான்வே இருப்பார் என நம்புகிறேன், அதே போல் டிரண்ட் பவுல்ட் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, சுப்மன் கில், மாயன்க் அகர்வால், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ்.