அணியில் தற்போது உள்ள பல்வேறு வகையான வீரர்களை பார்க்கும் போது தோனி கேப்டனாக இருந்த போது அவர் தலைமை வகித்த அணிக்கும் தற்போது கோலி தலைமை வகிக்கும் அணிக்கும் மிகபெரிய வித்யாசம் இருக்கிறது எனக் கூறியுள்ள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி.
ஆனால் சொல்லப்போனால் தோனி கேப்டனாக இருந்த போதும் கிட்டத்தட்ட இதே அணி தான் இருந்த்து ஆனாலும், தற்போது உள்ள அதே அணியின் கேப்டன்சிப் நன்றாக உள்ளது. இதனைப் பற்றி முகமது சமி கூறியதாவது,
தற்போது உள்ள இந்திய அணியில் உள்ள அனைவருமே சிறந்து விளங்குகின்றனர். ஒவ்வொருவரும் மற்றொருவருடைய வெற்றியைக் கொண்டாடுகிறோம். இது விராட் கோலி தலைமையிளான இந்திய அணிக்கு ஏற்ப்பாட ஒரு மிகச்சிறந்த என்விரான்மென்ட் ஆகும். தற்போது உள்ளூரில் நன்றாக ஆடி வருகிறோம். இதே அணியால் வெளிநாடுகளிலும் ஜொலிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நாங்கள் அனைத்து சவால்களுக்கும் தயாராக இருக்கிறோம். எதுவானாலும் பலிக்கு பலி தான். எந்த அணிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கத் தயாராக இருக்கின்றோம். எதிரணி ஸ்டெட்ஜ் செய்தான் அதே வழியில் திருப்பியும் கொடுப்போம் நாங்கள். இந்த அணியில் பயம் இல்லை.
தற்போது இருக்கும் அணி ஒரு முற்றிலும் மாறுபட்டது. முன்னர் இருந்த இந்திய அணிக்கும் தற்போது இருக்கும் அணிக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது. அப்போது சரியான ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. ரிவெர்ஸ் ஸ்விங் வீசக்கூடிய பந்து வீச்சாளரும் இல்லை. அப்படியே ஒரு பந்து வீச்சாளர் இருந்தாலும் அவரால் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் சரியாக அணிக்கு உதவும்படி இருக்காது. ஆனால் தற்போது உள்ள அணி அப்படி இல்லை இந்த அணி முற்றிலும் மாறுபட்டது அனைத்து விதமாகவும் அணிக்கு உதவக் வீரர்கள் அணியில் இருக்கின்றனர்.
மணிக்கு தொடர்ச்சியாக 140+ கி.மி வேகத்தில் வீசக் கூடிய வீரர்கள் அணியில் இருக்கின்றனர். தற்போது உள்ள கடைசி 5 வீரர்கள் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் சரியாக செய்ய முடியும். அது அணிக்கு பெரிய சொத்தாகும்.
இதற்கெள்ளாம் காரணம் தற்போது வீரர்களின் உடல் தகுதியில் அதிக கவனம் செலுத்தப்படுவதே ஆகும். முன்னர் இருந்த அணியை விட தற்போது இருக்கும் அணிக்கு வீரர்களின் உடல் தகுதி மற்றும் சரியான பயிற்சி கொடுத்தல் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்ப்பட்டுள்ளது. தற்போது தேவையான அனைத்து உபகரங்ணங்களும் நம்மிடமே உள்ளது. நாம் நமக்கு கிரிக்கெட் சம்மந்தமான எல்லாவற்றையும் தேசிய கிரிக்கெட் அகாடமியிலேயே பெற்றுக் கொள்ளலாம்.
எனக் கூறினார் சமி.
விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றாலும், அவருடைய கேப்டன் பதவி இன்னும் பரிசோதிக்கப்படவில்லை என்று கங்குலி கூறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு டோனியிடம் இருந்து கேப்டன் பதவியை வாங்கியவர் விராட் கோலி. 2015-ம் ஆண்டு காலே டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்குப்பின், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றாலும், அவரது கேப்டன் பதவி இன்னும் பரிசோதிக்கப்படவில்லை என்று கங்குலி கூறியுள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அனைத்து துறையிலும் சரி சமமாக உள்ளது. அபாரமான பந்து வீச்சு பலத்துடன், பேட்டிங் பலத்தையும் கொண்டுள்ளது. இதனால் தற்போது அவர்கள் எதையும் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
விராட் கோலி இன்னும் பரிசோதிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இலங்கை அண வலுவான டெஸ்ட் அணி கிடையாது. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி எப்படி செயல்படுகிற என்பதை பொறுத்துதான் மதிப்பிட முடியும்’’ என்றார்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளிடையேயான 2-வது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது டி20 போட்டியிலும் வென்று டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களம் கண்டது.
அதேநேரத்தில், ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை பறிகொடுக்கக் கூடாது என்ற நோக்கில் களம் இறங்குகியது.
8 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்து, டி 20 தொடரை 1-1 என சமன் ஆக்கியது ஆஸ்திரேலியா. ஏற்கனவே ராஞ்சியில் நடந்த முதல் டி 20 போட்டியை இந்தியா ஜெயித்தது குறிப்பிடத்தக்கது. 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டியில் ஜெயிக்கும் அணி, இந்தத் தொடரை கைப்பற்றும்.