நீ எல்லாம் டீம்ல இருக்கதே வேஸ்ட்… இந்திய அணியின் முக்கிய வீரரை வச்சு செய்யும் ரசிகர்கள்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் சொதப்பிய ரிஷப் பண்ட் நெட்டிசன்களின் கேலி கிண்டலுக்கு மீண்டும் ஆளாகியுள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
பஞ்சாப்பின் மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் புதிய கேப்டனான டி.காக் அரைசதமும், தெம்பா பாவுமா 49 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்ரிக்கா அணி வெறும் 149 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியில் இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ஷிகர் தவானுடன், கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதனாமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். தவான் 40 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி தொடர்ந்து அசத்தினார். ஆனால், ரிஷப் பண்ட் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 எடுத்தது. விராட் கோலி 52 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணியின் அடுத்த தோனியே இவர் தான் என்னும் அளவிற்கு ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டு வரும் இளம் வீரரான ரிஷப் பண்ட் வழக்கம் போல நேற்றைய போட்டியிலும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியது சமூக வலைதள கிரிக்கெட் ரசிகக்ரள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய போட்டியில் வெறும் 4 ரன்களில் மிக மோசமாக விக்கெட்டை இழந்து வெளியேறிய ரிஷப் பண்ட்டை, நெட்டிசன்களும் மிக மோசமாகவே விமர்சித்து வருகின்றனர்.
அதில் சில;
Pant not doing his cause any good. Poorly executed pull to a rank long hop. This after he was promoted to give him more time in the middle. Wont sit well with the team management for sure
— Cricketwallah (@cricketwallah) September 18, 2019
Rishabh pant does a Rishabh pant. Enough! He just wasted up every chance he has given.He should get back to domestic cricket improve his basics and temparment and again should make a comeback to intl level#12YearsOfHitmanInT20I
— Ha?♂️ (@Harun_264) September 18, 2019
Enough is enough now!
It's high time for Team India to give some chance to another young talent like Sanju Samson when they can clearly see that Rishabh Pant is not able to prove his worth and failing miserably… https://t.co/8VjVFojHyK— CricketIt (@cricketit2) September 18, 2019
Rishabh Pant is going to get a rap on the knuckles after this shot. #IndvsSA
— Gautam Chauhan? (@Gautamchauhan2) September 18, 2019
So called Rishabh pant fans who supported him endlessly during IPL
where r u now ? ?? pic.twitter.com/97VofvR192
— KriŞhna Şakēth ?? (@SakethC7) September 18, 2019
Man of the Match is Rishabh Pant
Well played boy pic.twitter.com/KrxXTSF0VE
— Sajan Randhawa (@crtified_fan_AK) September 18, 2019
Rishabh Pant must know that Sanju Samson and Ishan Kishan knocking the white-ball cricket door…
— Broken Cricket (@BrokenCricket) September 18, 2019
Hey @NetflixIndia just compile Rishabh Pant's dismissals and launch it. Many would laugh, many would get angry.
— Silly Point (@FarziCricketer) September 18, 2019