இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நேற்றறு இரவு கவுகாத்தியின் பரஸ்புரா மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செல்லுத்தி இந்தியாவை ஒரு நிமிடம் கூட எழ விடாமல் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு இது சற்று மோசமான தோல்வியாகவே அமைந்தது. போட்டி முடிந்த பின் ஆஸ்திரெலிய அணியின் தங்களுக்கு அனுப்பபட்ட பேருதின் மூலம் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆஸ்திரேலியா வீரர்கள் சென்ற பேருந்தின் மீது கல் வீசி தாக்கதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதனை உடனடியாக ஆஸ்திரேலிய துவக்க வீரர் ஆரோன் பின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களூடன் பதிவேற்றினார். வீசப்பட்ட கல் கிரிக்கெட் பந்தின் அளவு இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. அந்த கல் பேருந்தின் இடப்பக்க இருந்து ஜன்னலின் மீது வீசப்பட்டிருக்கிறது.
இதனால் பேருந்தின் கண்ணாடி உடைபட்டிருக்கிறது. உடந்த கண்ணாடி மற்று கல்லின் துண்டுகல் பேருந்திர்கு உள்ளே விழுந்து அச்சத்தை வீரர்களுக்கு ஏற்ப்படுத்தியுள்ளது.
நல்ல வேலையாக வீரர்கள் உக்கராதா அந்த ஜன்னலின் மீது கல் எறியப்பட்டதால் யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்ப்படவில்லை. இந்த சம்பவத்தினால் ஆஸ்திரேலிய வீரர்கள் நிலைகுழைந்து போயினர்.
பின்னர், உள்ளூர் போலிஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் அதிகாரிகளை பாதுகாப்பாக ஹோட்டளுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது வரை ஆஸ்திரேலிய அணியின் அதிகாரப்ப் பூரவமாக எந்த ஒரு அறிக்கையும் கண்டனகளும் தெரிவிக்கப்படவில்லை. இது போன்ற ஒரு செய்கை கண்டத்திற்க்கு உரியதாகும்.
இந்த சம்பத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற நாட்டிற்கு அவமாச் செயல் நடந்த உடனடியாக அசாமின் முதலமைச்சர் மாநிலத்தின் முதன்மைச் செய்ளாலரை அழத்து விசாரனை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.
பின்னர் அவரடைய அறிவுருத்தலின் பேரில் உடனடியாக செயல்பட்ட அசாம் டி.ஜி.பி அந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவ்ரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த தகவலை ஏ.என்.ஐ டீவி தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
Assam CM directed Chief Secy to conduct inquiry into incident & submit report, had earlier directed DGP Assam to immediately nab culprits.
— ANI (@ANI) October 11, 2017