ஐபிஎல்லில் நுழைந்த கொரோனா ! இரண்டு கொல்கத்தா வீரருக்கு கொரோனா உறுதி ! 1

ஐபிஎல்லில் நுழைந்த கொரோனா ! இரண்டு கொல்கத்தா வீரருக்கு கொரோனா உறுதி !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. இதனால் பல இந்தியர்கள் பாதித்தும் உயிரிந்தும் வருகின்றனர்.

ஐபிஎல்லில் நுழைந்த கொரோனா ! இரண்டு கொல்கத்தா வீரருக்கு கொரோனா உறுதி ! 2

கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் சிலண்டர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் சச்சின், பாட் கம்மின்ஸ், தவான் போன்ற கிரிக்கெட் வீரர்கள் நிதியுதவி செய்து வந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தற்போது ஐபிஎல் வீரர்களையும் தாக்க தொடங்கிவிட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஐபிஎல்லில் நுழைந்த கொரோனா ! இரண்டு கொல்கத்தா வீரருக்கு கொரோனா உறுதி ! 3

மேலும் மற்ற கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா இருக்கிறதா என்று இன்னும் தெரியவில்லை. இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த கொலகத்தா மற்றும் பெங்களூர் அணிக்கிடையேயான லீக் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியை ஒத்திவைக்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

இவ்வாறு கிரிக்கெட் வீரர்களூக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருதால் ஐபிஎல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரசிகர்களிடையும் அதிரிச்சியை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர்கள் வெளியேறியதால் ஐபிஎல் தொடர் நடத்த பல எதிரப்புகள் வந்தது. தற்போது இந்த செய்தியால் மேலும் பல எதிர்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல்லில் நுழைந்த கொரோனா ! இரண்டு கொல்கத்தா வீரருக்கு கொரோனா உறுதி ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *