நேற்று 12 கோடி… இன்று தெருக்கோடி… விலைபோகாத தைமல் மில்ஸ் !! 1
நேற்று 12 கோடி… இன்று தெருக்கோடி… விலைபோகாத தைமல் மில்ஸ்

கடந்த வருட ஐ.பி.எல் ஏலத்தில், 12 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தைமல் மில்ஸை, இந்த தொடரில் எந்த அணியும் விலைக்கு வாங்கவில்லை.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

நேற்று 12 கோடி… இன்று தெருக்கோடி… விலைபோகாத தைமல் மில்ஸ் !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்   நடைபெற்றது.

நேற்றும், இன்றும் நடைபெற்ற இந்த ஏலத்தில், 8 அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை எடுக்க பங்கேற்றுள்ளனர்.

இந்த ஏலத்தில், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலை சிறந்து விளங்கும் ஜோ ரூட், ஹசீம் ஆம்லா, இஷ் சோதி போன்ற வீரர்கள் விலை போகாத விநோதமும் நடைபெற்றது.

நேற்று 12 கோடி… இன்று தெருக்கோடி… விலைபோகாத தைமல் மில்ஸ் !! 3

இதே போல் கடந்த ஆண்டு சம்பந்தமே இல்லாமல் அனைத்து அணிகளும் மல்லுக்கட்டி, இறுதியாக பெங்களூர் அணியால் 12 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட தைமல் மில்ஸை, இந்த தொடரில் யாரும் அவர் நிர்ணனயம் செய்திருந்த விலையை கொடுத்து கூட வாங்க முன்வரவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *