வீரர்களின் தோள்மேல் கைபோட்டு அரவணைக்க வேண்டும்: கேப்டன் கோலிக்கு ‘தாதா’ அட்வைஸ் 1

இங்கிலாந்து தொடரில் கடைசியாக ராகுல், ரிஷப் பந்த் முதுகெலும்புடன் தைரியமாக அதிரடி ஆட்டம் ஆடி இங்கிலாந்தை அச்சுறுத்தி ஆடியதால் தொடரை 4-1 என்று இழந்தாலும் ரசிகர்ளுக்கு ஆறுதல் கிடைத்தது.

இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன்சி அணுகுமுறையில் பல குறைகள் தெரிய ஆரம்பித்துள்ளதால் பலரும் அவருக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

வீரர்களை நடத்துவதில் வேலை வாங்குவதில் நிபுணரான முன்னாள் கேப்டன் தாதா கங்குலி, விராட் கோலிக்கு தற்போது ஆலோசனை வழங்கியதாவது:

“போஸ்ட் மார்ட்டம் செய்வதை விட, திறமைகளை அங்கீகரிப்பதே இப்போது முக்கியம். புஜாரா, ரஹானே, ராகுல் இந்தத் தொடரில் ஆடியது முன்னை விட 10 மடங்கு மேம்பட்ட ஆட்டமாகும்.

கோலி வீரர்களிடமிருந்து சிறப்பான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டும். இது கேப்டனின் பொறுப்பு.

ஒரு கேப்டனாகப்பட்டவர் வீரர்களின் தோள்மேல் கைபோட்டு அரவணைத்து தனக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருமாறு பேச வேண்டும் ஆட்டத்திறன் தானாகவே மேம்படும்.” என்றார் கங்குலி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *