கராச்சியில் உள்ள ஒரு பீட்சா கடையில் கோஹ்லி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்புவீர்களா. அட, இந்தப் படத்தைப் பார்த்துட்டுச் சொல்லுங்க.
கராச்சியில் உள்ள ஒரு பீட்சாக் கடைக்குப் போன முஸ்தபா சொஹைல் என்பவர் அங்கு பீட்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைப் பார்த்து ஜெர்க் ஆகி நின்று விட்டார். என்னடா இது கோஹ்லி வந்து பீட்சா தயாரிக்கிறாரே என்றும் குழம்பிப் போய் விட்டார்.
உண்மையில் அது கோஹ்லி இல்லை. கோஹ்லி போன்ற உருவம் கொண்ட பாகிஸ்தானியர்தான். உடனே தனது செல்போனை எடுத்து அந்தப் போட்டைவை பேஸ்புக் உள்ளிட்டவற்றில் போட்டார். பிறகென்ன, வழக்கம் போல வைரலானது. அந்த வீடியோவில் உள்ள நபரைப் பார்த்தால் அட கோஹ்லி என்றுதான் முதலில் சொல்லத் தோன்றும் யாருக்குமே.
இப்போது அந்த பீட்சா ஊழியர் “நானும் ரெளடிதான்” ரேஞ்சுக்குப் பிரபலமாகி விட்டார்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பங்கேற்க பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார் விராட் கோலி. மற்றொரு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.