Cricket, India, Virat Kohli, Zaheer Khan

தற்போது நடந்து கொண்டிருக்கும் இலங்கை தொடர் முடிந்த உடன் இந்திய அணி தென்னாப்ரிக்காவுக்கு சென்று நீண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடாமல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கேப்டன் விராட் கோலி விளையாட மாட்டார் என்று தான் தெரிகிறது, இதனால் அவருக்கு பதிலாக இந்திய அணியை ரோகித் சர்மா வழி நடத்துவார். இதே நேரத்தில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் ஜேஸ்ப்ரிட் பும்ரா ஆகியோர் போராடுகிறார்கள்.

இந்திய அணியின் தேர்வாளர்கள் நான்கு விதமான அணியை நவம்பர் 27 அன்று வெளியிடுவார்கள். ஒன்று இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக, அடுத்த இரண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக மற்றும் கடைசி ஒன்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்திற்காக. இந்திய அணிக்கு பெரிய முக்கிய தொடர் வருவதால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு எடுத்து, தன்னை தயார் படுத்தி கொள்வார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் & டி20 தொடரில் கோலி விளையாட வாய்ப்பில்லை 1

இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் நடக்கவுள்ளது, அந்த போட்டியிலும் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்தால், துணைகேப்டனாக இருக்கும் அஜிங்க்யா ரஹானே அந்த போட்டியில் கேப்டனாக செயல் படுவார். கேப்டனாக பொறுப்பேற்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வெளிநாட்டில் சென்று ஒரு முக்கிய தொடரில் விளையாடவுள்ளது.

இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு தற்போது பெரிய தலைவலியாய் இருக்கும். தென்னாப்ரிக்காவுக்கு நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்வதா அல்லது ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வதா என்று ஒரே குழப்பமாக இருக்கும். புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து இன்னொரு நட்சத்திர பந்து வீச்சாளர் ஜேஸ்ப்ரிட் பும்ராவும் டெஸ்ட் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.

தொடர்ந்து விளையாடி கொண்டு வருவதால் இலங்கை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்- பாண்டியாவுக்கு ஓரு கொடுத்தார்கள். இதனால், முக்கியமான தென்னாபிரிக்கா தொடரில் இந்திய அணிக்காக ஹர்டிக் பாண்டியவும், அவருடன் சேர்ந்து யுஸ்வேந்த்ர சஹால் அல்லது குல்தீப் யாதவ் ஆகியோரில் ஒருவர் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் பலமாகவே உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை தொடக்கத்தில் இருந்து ஏழு வீரர்கள் இருக்கிறார்கள். மூன்று தொடக்கவீரர்கள் மற்றும் நான்கு நடுவரிசை வீரர்கள் கண்டிப்பாக விளையாடுவார்கள்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் & டி20 தொடரில் கோலி விளையாட வாய்ப்பில்லை 2

டி20 தொடருக்கான இந்திய அணியில் மனிஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயஸ் ஐயரை சேர்க்க, கூடுதலாக முகமது சிராஜ் மற்றும் பசில் தம்பியை சேர்ப்பார்கள் என தெரிகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *