ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரரை நிராகரிப்பது சரியா? யோ-யோ டெஸ்டுக்கு எதிராக குரல்கள் 1

இந்திய அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாய விதிமுறைக்கு எதிராக குரல்கள் தற்போது வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரரை நிராகரிப்பது சரியா? யோ-யோ டெஸ்டுக்கு எதிராக குரல்கள்

இந்திய கிரிக்கெட் அணியில் தேர்வாக யோ-யோ டெஸ்டில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை அணில் கும்ளே பயிற்சியாளராக இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. வெளிநாடுகளில் இந்த முறை இருந்த போது, உடல்தகுதி வீரர்களுக்கு மிகவும் முக்கியமாக கருதப்பட்டு இந்த முறையை இந்தியாவிலும் அவர் அறிமுகம் செய்தார்.ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரரை நிராகரிப்பது சரியா? யோ-யோ டெஸ்டுக்கு எதிராக குரல்கள் 2

இந்தியாவில் இந்த டெஸ்டில் தேர்ச்சி பெற 16.1 மதிப்பெண் எடுத்தாகவேண்டும். ஒவ்வொரு அணிக்கேற்ப இந்த மதிப்பெண் மாறுபடுகிறது. இந்நிலையில், இந்த டெஸ்ட் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக இந்தாண்டு நடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட அம்பாத்தி ராயுடு, சஞ்சு சாம்சன் ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளதால் இந்திய அணிக்கான வாய்ப்பை இழந்துள்ளனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவர் இந்திய அணியில் இடம் பெறாமல் போவதற்கு இந்த யோ-யோ டெஸ்ட் காரணமாகிறது என்றால், இது ஒருதலைப்பட்சமானது என்று ஐதராபாத் கிரிக்கெட் சங்க செயலாளர் ஷ்ரேயாஸ் நாராயணன் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரரை நிராகரிப்பது சரியா? யோ-யோ டெஸ்டுக்கு எதிராக குரல்கள் 3

இந்திய கிரிக்கெட் அணி, வரும் 23ம் தேதி புறப்பட்டுச் செல்கிறது இங்கிலாந்துக்கு. அங்கு
அயர்லாந்து அணியுடன் ஜூன் 27, 29 ஆம் தேதிகளில் இரண்டு டி20 போட்டிகளிலும்  இங்கிலாந்து அணியுடன் ஜூலை 3ம் தேதி முதல் 3 டி20, மூன்று ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தொடர்களில் பங்கேற்பதற்கு முன்பாக வீரர்களுக்கு ‘யோ-யோ’ என்ற உடல் தகுதித் தேர்வை நடத்துவது வழக்கம். இதில் வெற்றிபெற்றால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும்.

இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணி, இந்திய ஏ அணி வீரர்களுக்கான யோ-யோ டெஸ்ட் சமீபத்தில் நடந்தது. இதில் ஏ அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன், ஒரு நாள் அணியில் இடம்பெற்ற அம்பத்தி ராயுடு, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் தேர்வு பெறவில்லை. இதனால் இவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரரை நிராகரிப்பது சரியா? யோ-யோ டெஸ்டுக்கு எதிராக குரல்கள் 4

அனைத்து வீரர்களுக்கும் ’யோ யோ’ தேர்வு நடந்தபோது, அந்த நாளில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. இதனால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளியாயின. ரோகித் சர்மா, யோ யோ உடல் தகுதி தேர்வில் தகுதி பெறவில்லை என்றும் அவருக்குப் பதிலாக ரஹானே இடம் பெறுவார் என்றும் கூறப்பட்டன. இதையடுத்து ரோகித்தை விமர்சித்தும் விவாதங்கள் இடம்பெற்றன. சில மீடியாவும் சேனல்களும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டன.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் நேற்று நடந்த யோ யோ டெஸ்டில் ரோகித் தேர்வு பெற்றார். இதன்மூலம், இங்கிலாந்து தொடரில் அவர் பங்கேற்பது உறுதியானது.

இதையடுத்து அவர் கூறும்போது, ‘தேவையில்லாமல் சில சேனல்களும் மீடியாவும் தவறான செய்திகளை பரப்புகின்றன. ’நான் எங்கே போயிருந்தேன். எங்கு நேரத்தைச் செலவிட்டேன். ஏன் குறிப்பிட்ட நாளில் யோ யோ தேர்வில் பங்கேற்கவில்லை’ என்பதையெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அது என் சொந்த விவகாரம். செய்திகளை வெளியிடும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து வெளியிடுவது நல்லது’ என்று காட்டமாகத் தெரிவித்துள்ளா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *