ஜூன் 13ம் தேதியில் இருந்து துவங்க இருக்கும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போட்டியில் ஒரு வருட தடை விதித்த பிறகு சிறிது காலம் கமென்டரி செய்ய உள்ளார்.
மார்ச் மாதம் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேத படுத்திய விவகாரதிர்க்காக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் இருவரும் 12 மாதம் ஐசிசி நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டனர். மேலும் இதற்கு துணை சென்ற பென் கிராஃப்ட் க்கு 9 மாதம் தடை விதிக்கப்பட்டது.
இதனால் வார்னர், ஸ்மித் இருவரும் பதவி விலகினர். மேலும் இதற்கு தண்டைனயாக, ஒரு வருடம் கிரிக்கெட் தொடர்பான சேவை செய்ய வேண்டும் எனவும் ஐசிசி நிர்வாகம் உத்தரவிட்டது.
சிட்னியில் உள்ள பள்ளிகளில் சென்று இருவரும் மாணவர்களுக்கு கிரிக்கெட் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகள் எடுத்தனர். இவர்களது நடவடிக்கைக்கு மதிப்பெண்களும் வழங்கப்படும். இதன் அடிப்படையில் தான் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவர்.
தடை காரணமாக ஐபில் போட்டியிலும் விளையாட இவர்கள் அனுமதிக்க படவில்லை. இடைப்பட்ட காலங்களில் உள்ளுர் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
சமீபத்தில் நடந்த கனடா குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாட ஸ்மித், வார்னர் இருவரும் ஏலம் எடுக்கப்பட்டனர். ஜூன் 28ம் தேதி துவங்கும் இந்த போட்டியில் வார்னர் ஹாக்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
இதற்கிடையில், இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிக்காக போட்டியில் கமென்டரி செய்ய அழைக்க பட்டுள்ளார். மேலும், போட்டிகளில் விளையாடாத நேரங்களில், ஆஸ்திரேலியா போட்டிகளில் கமென்டரி செய்ய ஒப்பந்தம் ஆகியுள்ளார்.