வீடியோ: மிகச் சிறந்த கேப்டன் விராட் கோலியா? ரோஹித் சர்மாவா? முட்டிக் கொண்ட கௌதம் கம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா! 1

வீடியோ மிகச் சிறந்த கேப்டன் விராட் கோலியா? ரோஹித் சர்மாவா? முட்டிக் கொண்ட கௌதம் கம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா!

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இடையே இருக்கும் பனிப் போர் ஒரு பக்கம் முற்றிவிட்ட வேளையில், அதற்கு எரியும் தீயில் எண்ணெய் ஊட்டுவது போல் செயல்பட்டு வருகிறார்கள். முன்னாள் வீரர்கள் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருக்கிறார் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கிறார்.

Gautam Gambhir

பிரச்சனை என்னவென்றால் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல தொடர்களை வென்று கொடுக்கும் விராட் கோலி தற்போது வரை உலக கோப்பை தொடரை வென்றதில்லை. ஆனாலும் வெளிநாட்டு தொடர்களில் மலைக்க வைக்கும் விதமாக இந்திய அணியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக தனது பணியை செய்து வருகிறார். அவரது கேப்டன்ஷிப் காலகட்டத்தில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை வென்று இருக்கிறது.

Rohit Sharma, Virat Kohli, RCB vs MI, IPL 2020

தொடர்ந்து இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி இவை அனைத்தும் ரோஹித் சர்மாவின் தலைமையில் தான். இதனால் விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மாவை டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் குரல்கள் வலுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு விவாதம் செய்ய வந்த ஆகாஷ் சோப்ரா மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் இந்த விஷயத்தில் முரண்பட்டுக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர்.

கௌதம் கம்பீர் எப்போதும்போல் விராட் கோலியை சாடிக்கொண்டிருந்தார். அதாவது விராட் கோலியுடன் ரோகித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் இருவருக்குமே மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இதனை எப்போதும் கூறுவேன் விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த கேப்டன். விராட் கோலியை மோசமான கேப்டன் என்று கூறவில்லை ஆனால் ரோஹித் சர்மா அவரை விட மிகச் சிறந்த கேப்டன் என்று தெரிவித்திருக்கிறார் கௌதம் காம்பீர்.

இதனை பார்த்த ஆகாஷ் சோப்ரா இது மோசமான உதாரணமாக இருக்கிறது தோனி பற்றி மட்டுமே இவருக்கு பேசத் தெரியும் என்று கௌதம் காம்பீர் சென்றுவிட்டார். இதனால் கடுப்பான கௌதம் காம்பீர் நேரலையில் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *