தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகளில் தோல்வி பெற்று தொடரை இழந்தது ஆஸ்திரேலிய அணி.
அதன் பிறகு இந்தியாவுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. முதல் டி20 போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சி மைதானத்தில் நடந்தது. மழை குறுக்கிட்டு இருந்ததால், 6 ஓவருக்கு 48 ரன் எடுத்தால் இந்திய அணி வெற்றி என்ற இலக்கை கொடுத்தார்கள் நடுவர்கள். அதனை அசால்ட்டாக அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
இதனை தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி குவாஹாட்டி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால், இந்திய ரசிகர்களுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
வந்த முதல் இரண்டு பந்துமே பவுண்டரி விளாசிய ரோகித் சர்மா, அதற்கு அடுத்த பந்திலே அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் கோலியும் இரண்டாவது பந்தில் அவுட் ஆனார். அது மட்டும் அல்ல, அடுத்து சில ஓவர்களில் ம் மனிஷ் பாண்டே, ஷிகர் தவான் ஆகிய வீரர்களையும் இந்திய அணி இழந்தது.
அடுத்து தோனி – ஜாதவ் ஜோடி இந்திய அணியை காப்பாற்றுவார்கள் என்று நினைத்த போது, இருவரும் சிறப்பாக ரன்னை சேர்த்தார்கள். சம்பா வீசிய பந்தில் ஏறி அடிக்க நினைத்தார் தோனி, அந்த பந்தை வைட் திசையில் வீசவே, மீண்டும் கிரீஸுக்கு சென்றார் தோனி. ஆனால், அடுத்த பந்தில் அதே போல் ஏறி அடிக்க நினைத்தார், ஆனால் இந்த முறை அவர் ஸ்டம்பிங் ஆனார்.
அந்த வீடியோவை பாருங்கள்:
https://twitter.com/84107010ghwj/status/917758615745912832