ராஞ்சியில் தனது சொகுசு காரில் இந்திய வீரர்களை வெளியில் அழைத்து சென்ற தோனி, வைரலாகிறது வீடியோ.
இந்தியாவிற்கு எதிராக 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி ஒருகட்டத்தில் 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது. இந்த நிலையில், தோனியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினர். சிறப்பாக விளையாடிய ஜாதவ் முதலில் அரைசதத்தை கடந்தார். அவரைத் தொடர்ந்து தோனியும் அரைசதத்தை கடந்தார்.
இதன்மூலம், இந்திய அணி 48.2 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் விராத் கோஹ்லி சாதம் விளாசி அணியை 250 ரன்கள் வரை எடுத்து சென்றார். அதன்பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் தொடரில் 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது போட்டியில் முதல் பந்திலேயே தோனி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் அவர் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறியது இது 5வது முறையாகும். கடந்த முறை 2010 ஆம் ஆண்டு இது நிகந்தது.
மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் தோனி இந்திய வீரர்களை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்ற தோனி, தனது உயர்ரக சொகுசு காரில் அனைவரையும் வெளியேயும் அழைத்து சென்றார்.
வீடியோ இதோ: