தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு வழக்கம் போல் டி காக்கும், ஜென்னாமன் மாலனும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
கடந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியிடம் இருந்து வெற்றியை பறித்த இந்த கூட்டணியை, தீபக் சாஹர் போட்டியின் 3வது ஓவரிலேயே பிரித்தார். தீபக் சாஹரின் பந்துவீச்சில் மாலன் (1) கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்தடுத்து களமிறங்கிய மார்க்ரம் (15), டெம்பா பவுமா (8) போன்ற வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்தாலும், ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குவிண்டன் டி காக் – வான் டெர் டூசன் கூட்டணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன் குவித்தது.
இந்திய அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு ரன் குவித்த டி காக் 124 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். வான் டெர் டூசன் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த வீரர்களில் டேவிட் மில்லரை (39) மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 49.5 ஓவரில் 287 ரன்கள் எடுத்த போது தென் ஆப்ரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அரைசதத்தை விராட் கோலி தனது மகளுக்கு சமர்பித்த வீடியோ இங்கே;
5⃣0⃣ for Shikhar Dhawan 👏 #SAvIND pic.twitter.com/clBliPa6b7
— Doordarshan Sports (@ddsportschannel) January 23, 2022
5⃣0⃣ for Virat Kohli 👏 #SAvIND pic.twitter.com/kQUx0Ae0OK
— Doordarshan Sports (@ddsportschannel) January 23, 2022
இதனையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கே.எல் ராகுல் 9 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த ஷிகர் தவான் – விராட் கோலி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி 65 ரன்களிலும், ஷிகர் தவான் 61 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
கோலி மற்றும் தவான் விக்கெட்டை இழந்தபிறகு களத்திற்கு வந்த வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காததால் இந்திய அணி தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது.