டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட யோசிக்கும் ஆஸி வீரர்! 1

மூன்று வகை கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக விளையாடி வரும் பேட் கம்மின்ஸ் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருக்கும் கம்மின்ஸ், தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘அதிகமான கிரிக்கெட்டில் விளையாடியுள்ளேன். ஆனால், ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அதிகமானது ஒயிட்பால் கிரிக்கெட்டுதான். டெஸ்ட் போட்டியை விட அது கொஞ்சம் எளிதாக இருக்கும். கடந்த சில வருடங்களாக எல்லா வகை கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ளேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட யோசிக்கும் ஆஸி வீரர்! 2
MELBOURNE, AUSTRALIA – DECEMBER 27: Pat Cummins of Australia celebrates the wicket of Cheteshwar Pujara of India during day two of the Third Test match in the series between Australia and India at Melbourne Cricket Ground on December 27, 2018 in Melbourne, Australia. (Photo by Michael Dodge/Getty Images)

ஆனால், ஒயிட் பால் போட்டியை பொறுத்த வரைக்கும் அதிக அளவில் கவனம் செலுத்த முடியும் என உணர்கிறேன். உடல் நான்கு ஓவர்களை மட்டுமே விரும்புகிறது’’ என்றார்.

கேப்டவுனில் நடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது.

வார்னர் 37 பந்தில் 57 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி,1 சிக்சர் ), ஸ்டீவ் சுமித் 15 பந்தில் 30 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர். ரபடா, நிகிடி, பிரிட்டோரியஸ், ‌ஷம்சி, நோட்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 15.3 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முழுக்கு போட யோசிக்கும் ஆஸி வீரர்! 3

வான்டார் துஸ்சன் அதிகபட்சமாக 24 ரன் எடுத்தார். ஸ்டார்க், ஆஷ்டோன் அகர் தலா 3 விக்கெட்டும் கம்மின்ஸ், மிட்சேல் மார்ஷ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி முதல் போட்டியில் 107 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 12 ரன்னில் வெற்றி பெற்றது.

அடுத்து இரு அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *