சிஎஸ்கேவை பயமின்றி எதிர்கெண்ட தமிழக வீரர் ; யார் இந்த ஷாருக்கான் ? இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தாரு ! 1

14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் தமிழக வீரர் ஷாருக்கான் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்து கொடுத்து இருக்கிறார். சிஎஸ்கே பவுலர்கள் தீபக் சஹார் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்து இருக்கின்றனர்.

சிஎஸ்கேவை பயமின்றி எதிர்கெண்ட தமிழக வீரர் ; யார் இந்த ஷாருக்கான் ? இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தாரு ! 2

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவரிலே இலக்கை எட்டி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றனர். இதில் டூபிளெசிஸ் 36 ரன்களும், மொயின் அலி 46 ரன்களும் அடித்து இருக்கின்றனர். பஞ்சாப் சார்பாக முகமது ஷமி 2 விக்கெட்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்த போட்டியில் பஞ்சாப் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்த போது தமிழக வீரர் ஷாருக்கான் மட்டும் தனியாளாக நின்று 36 பந்தில் 47 ரன்கள் குவித்து அசத்தினார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். இவ்வளவு சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் ஷாருக்கான் யார் ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சிஎஸ்கேவை பயமின்றி எதிர்கெண்ட தமிழக வீரர் ; யார் இந்த ஷாருக்கான் ? இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தாரு ! 3

ஷாருக்கான் 2013-2014 ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்காக முதன் முதலில் அறிமுகமாகினார். இதையடுத்து 2018-2019 ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமாகினார். தொடர்ந்து தனது திறமைகளை வெளிப்பட்டு வந்த இவர் இந்தாண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் அதிரிடியாக பேட்டிங், பவுலிங் செய்து அனைவராலும் கவர்ப்பட்டார்.

இந்த தொடரில் இமாச்சல் பிரதேசம் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 19 பந்தில் 40 ரன்கள் அடித்து இருக்கிறார். இந்த தொடரில் அதிக ஸ்ட்ரை ரேட் பெற்று வீரர்களின் பட்டியலில் 220 ஸ்ட்ரைக் ரேட் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதன்மூலம் ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் மூலம் இந்தாண்டு அறிமுகமாகியிருக்கிறார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 பந்தில் 6 ரன்கள் மட்டும் எடுத்து விக்கெட் இழந்தார். ஆனால் சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 47 ரன்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

சிஎஸ்கேவை பயமின்றி எதிர்கெண்ட தமிழக வீரர் ; யார் இந்த ஷாருக்கான் ? இத்தனை நாள் என்ன பண்ணிட்டு இருந்தாரு ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *