தற்போது நடை பெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் சுவாரசியமாக நடந்து வரும் வேளையில், கேரளாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பேசில் தம்ப்பி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
முன்னாள் விக்கெட் கீப்பர் சந்திரகாந்த் பண்டிட் பேசில் தம்ப்பி பற்றி என கூறினார் என்று தெரியுமா ?. ” முதன் முதலில் பேசில் தம்ப்பியின் பந்து வீச்சை பார்த்து அதிசயித்ததாக தெரிவித்தார்,வயநாடில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மைதானத்தில் வலுவான சுருட்டைத் தலை இளம் வீரர் ஒருவர் வீசுவதைப் பாருங்கள்” என்று கூறினார்.
இன்னும் சர்வதேச போட்டிகளில் களம் இறங்காத பேசில் தம்ப்பி இப்பொழுதே இந்த ஐபிஎல் போட்டியின் மூலம் பெரிய பெரிய ஜாம்பவான்களை மிரட்டி வருகிறார்,இவரது யார்க்கர்கள் ஸ்டீவ் ஸ்மித் போன்ற பெரிய பேட்ஸ்மென்களையே மிரட்டியது. முதன் முதலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடும் போதே ஜாம்பவான்களான கோலி, கெய்ல், தோனி ஆகியோரை வீழ்த்தினார். கெய்ல் ஒரு போட்டியில் இவரை எதிர்கொள்ள முடியாமல் திணறியது கண்கூடு.
இதை பற்றி பேசில் தம்ப்பி ஆங்கில பத்திரிகையில் கூறுகையில் “கடந்த ஒரு மாதம் எனக்கு அருமையாக அமைந்தது. கிரேட் பேட்ஸ்மென்களுக்கு வீசுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுகிறேன் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை” என்றார்.
இவரது முதல் விக்கெட் யார் தெரியுமா அது நம்ம கிறிஸ் கெய்ல் தான். அவர் விக்கெட்டை எடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அழிகிறது என்று கூறினார். “இதை விட பெரிய விக்கெட்டை நான் எதிர்பார்க்க முடியாது, யார்க்கரில் இவரை எல்.பி. ஆக்கியதை என்னால் மறக்க முடியாது. மேலும் கோலி, தோனி, மணிஷ் பாண்டே, கெய்ரன் பொலார்ட் விக்கெட்டுகளையும் என்னால் மறக்க முடியாது.
பேசில் தம்ப்பி வரும் போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெறுவாரா என்று பாக்கலாம்.