ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் புணே அணிக்காக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 2 சாதனைகளை படைத்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையை 17 வயது 228 நாள்களில் படைத்துள்ளார். முன்னதாக, ரவீந்திர ஜடேஜா 19 வயது 178 நாள்கள் (2008), மனிஷ் பாண்டே 19 வயது 256 நாள்கள் (2009) விளையாடி உள்ளனர்.
மேலும், மற்றொரு சாதனையாக, ஐபிஎல் இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி குறைந்த ரன்கள் அளித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நேற்றைய இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதற்கு முன் அஷ்வின், கும்ப்ளே, ஆர்பிசிங் ஆகியோர் 4 ஓவர்களை வீசி தலா 16 ரன்களை வழங்கியுள்ளனர்.
அஸ்வின்னை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் சூழல் பந்தில் கலக்கி கொண்டு வருகிறார், அஸ்ஹவினை போல வாஷிங்டன் சுந்தர் சாதனைகளை படைத்தது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பர் என தமிழ் நாட்டு ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.