வீடியோ; ஸ்டெம்பை தெறிக்கவிட்ட தீபக் சாஹர்… மிரண்டு போன மாயன்க் அகர்வால் !! 1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி திணறி வருகிறது.

14வது ஐபிஎல் சீசசின் 8வது போட்டியான இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளும் எவ்வித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான இரு அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

வீடியோ; ஸ்டெம்பை தெறிக்கவிட்ட தீபக் சாஹர்… மிரண்டு போன மாயன்க் அகர்வால் !! 2

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன கிரிஸ் கெய்ல்,கே.எல் ராகுல், நிக்கோலஸ் பூரன் போன்ற பல வீரர்கள் இடம்பெற்றிருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது.

பஞ்சாப் அணியின் துவக்க வீரரான மாயன்க் அகர்வாலை, சென்னை அணியின் துவக்க வீரரான தீபக் சாஹர் போட்டியின் முதல் ஓவரின் 4வது பந்திலேயே போல்டாக்கி வெளியேற்றினார்.

வீடியோ; ஸ்டெம்பை தெறிக்கவிட்ட தீபக் சாஹர்… மிரண்டு போன மாயன்க் அகர்வால் !! 3

இதனையடுத்து மற்றொரு துவக்க வீரரான கே.எல் ராகுலை, உலகின் நம்பர் 1 பீல்டரான ரவீந்திர ஜடேஜாவின் துல்லியமான த்ரோவால் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய கிரிஸ் கெய்ல் (10), தீபக் ஹூடா (10) மற்றும் நிக்கோலஸ் பூரண் (0) ஆகியோர் தீபக் சாஹரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

இதன் மூலம் போட்டியின் முதல் 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி வெறும் 45 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

தீபக் சாஹரின் துல்லியமான பந்துவீச்சில் மாயன்க் அகர்வால் ஸ்டெம்பை பறிகொடுத்த வீடியோ;

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *