இந்திய அணி ஜெயிக்கணும்னு நான் ஒரு வேலை பண்ணேன்; அது நடந்துவிட்டது – சிம்பிளாக சொல்லி முடித்த ஹர்திக் பாண்டியா!

இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்று நான் செய்தது இது மட்டும் தான் என போட்டி முடிந்த பிறகு சூட்சமத்தை பேட்டியில் கூறியுள்ளார் ஹர்திக் பாண்டியா. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பேட்டிங் செய்வதற்கு முடிவு செய்தார். ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இரண்டு பேரும் இந்திய அணிக்கு ஓப்பனிங் பேட்டிங் செய்தனர். இஷான் கிஷன் (1) துவக்கத்திலேயே ஆட்டமிழந்தார். […]