இந்திய ஹாக்கி அணி வீராங்கனை கொலை செய்து தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? பரபர குற்றச்சாட்டு

இந்திய மகளிர் ஹாக்கி அணியில் ஆடிய வீராங்கனை ஒருவர் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்பத்தார் குற்றம்சாட்டியுள்ளனர். ஹரியானா மாநிலம், சோன்பட் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான ஜோதி குப்தா அந்த வீராங்கனை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய அணியில் முன்கள வீராங்கனையாக விளையாடிவந்த ஜோதி குப்தா ஆசிய போட்டியில் விளையாடி உள்ளார். கடந்த 2ம் தேதி ரோடாக்கில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழில் உள்ள பெயர் […]