இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னால் பயிற்சியாளர் அணில் கும்ளேவிற்கு இன்னும் சம்பள பாக்கியை செலுத்தவில்லை என சமூக வலைதளங்களிலும் , ஊடகங்களிலும் செய்திகள் வண்ணம் இருந்தது . ஆனால் இப்போது அந்த கடைசியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு நிலுவை தொகையை செலுத்திவிட்டதாக செய்திகள் வந்துள்ளது.
அதாவது முன்னால் பயிற்சியாளர் அணில் கும்ளேவிற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்திருந்த சம்பள பாக்கி ரூபாய் 48,75,000த்தை அவருக்கு அளித்துவிட்டதாக பிசிசிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , இந்த 48,75,000 ரூபாய் மே மற்றும் ஜூன் மாத சம்பள பாக்கி ஆகும்.
முன்னால் இந்திய சுழற்பந்து வீச்சாளரான இவர் தான் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியில் இறுதி போட்டி வரை செல்ல. பயிற்சியாளராக இருந்தார். அவருடைய பயிற்சிகாலம் இந்தியாவின் மேற்க்கு இந்திய தீவுகள் சுற்றுப் பயணம் வரை இருந்தது . ஆனால் , இந்திய கேப்டன் விராட் கோலியுடனான சர்ச்சைக்குள்ளான பிறகு கும்ளே சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இந்திய அணி இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் கும்ளே – விராட் பற்றிய சர்ச்சை முற்றுபெற்றுள்ளது.
கும்ளேவுடன் சேர்த்து , பிசிசிஐ பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் , தற்போதைய தேர்வுக்குழ தலைவர் சரண் தீப் சிங் , முன்னால் தேசிய தேர்வுக்குழு உறுப்பினர் ஜஸ்டின் பன்ச் ஆகியோருக்கு ஒரே துணையாக அவர்களுடைய சம்பளத்தை அளித்துள்ளது.
அவர்களைத் தவிர , ராபின் சிங் , ஆசிட் பட்டேல் , டேவிட் ஜான்சன், பிரணாப் ராய் , விவேக் ராஸ்டன் , யோகராஜ் சிங் , சுப்ரோடோ பானர்ஜி, ஃஏஎ சேகர் , சுருக்கம் நாயக் , டினு யோகன்னன் , குலாம் பார்க்கர், ஹர்விந்தர் சிங் , சைசில் அன்கோலா , போல் டேவிட் , பிரசாத் வைத்யா, டி.குமரன் , அசோக் படேல் , அடுத்த பேண்டேஜ் , ரீடின்டர் சோதி ஆகியோர் அக்காலத்தில் இந்தியாவின் 1 முதல் 9 வரையிலான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்கள் ஆவார் . அவர்களுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூபாய் 35 லட்சத்தை வழங்கியுள்ளது.