அபார திறமை...இந்த பையன் இரண்டு வீரர்களுக்கு சமம்; இளம் வீரரை பாராட்டி பேசிய முன்னாள் வீரர் !! 1

ஹர்திக் பாண்டியா இரண்டு வீரர்களை உள்ளடக்கிய ஒரு வீரராக திகழ்கிறார் என்று கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வந்த ஹர்திக் பாண்டியா, கடந்த வருட ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியாவால் பழையபடி பந்துவீச முடியாததால் கடந்த வருடம் இந்திய அணியில் இருந்தும் ஹர்திக் பாண்டியா ஓரங்கட்டப்பட்டார்.அபார திறமை...இந்த பையன் இரண்டு வீரர்களுக்கு சமம்; இளம் வீரரை பாராட்டி பேசிய முன்னாள் வீரர் !! 2

இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட பிறகு தானாக முன்வந்து அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தற்காலிக ஓய்வை அறிவித்திருந்த ஹர்திக் பாண்டியா, தனது விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்தி மீண்டும் பழைய ஹர்திக் பாண்டியாவாக மீண்டு வந்தார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பாக செயல்பட்டு குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்று கொடுத்தார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ஹர்திக் பாண்டியா, அன்றிலிருந்து இன்றுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

அபார திறமை...இந்த பையன் இரண்டு வீரர்களுக்கு சமம்; இளம் வீரரை பாராட்டி பேசிய முன்னாள் வீரர் !! 3

சிறப்பான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகின் ஹாட் டாப்பிக்காக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியாவை முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்

குறிப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்டியாவிர்க்கு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அபார திறமை...இந்த பையன் இரண்டு வீரர்களுக்கு சமம்; இளம் வீரரை பாராட்டி பேசிய முன்னாள் வீரர் !! 4

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத், இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இதுகுறித்து மெக்ராத் பேசுகையில்,“கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கையான ஒரு போட்டியாகும், அதில் ஹர்திக் பாண்டியா அதிக தன்னம்பிக்கிலும் செயல்படும் வீரராக உள்ளார். அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுகிறார். அதேபோன்று பேட்டிங்கில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவர் இரண்டு வீரரை உள்ளடக்கிய ஒரு வீரராக திகழ்கிறார். அவர் சிறப்பாகவும் புத்திசாலித்தனமாகவும் பந்து வீசுகிறார் மேலும் அதிரடியாக பேட்டிங் செய்கிறார் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் தெளிவாகவே இருக்கிறது என்று ஹர்திக் பாண்டியாவை கிளென் மெக்ராத் பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *