கவுதம் கம்பீர்க்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து இருக்கிறார் நிதிஷ் ராணா

இந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது playoff சுற்றுக்கு தகுதி பெற இன்னும் சில போட்டிகள் வென்றால் போதும்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றியில் நிதிஷ் ராணாவிற்கு மிக பெரிய பங்கு இருக்கிறது, இவர் இந்த ஐ.பி.எல் போட்டிகளில் தான் அவரது முழு திறமைகளையும் வெளி காட்டி வருகிறார், இதுவரை ராணா எந்த ஒரு ஐ.பி.எல் போட்டியிலும் இந்த அளவிற்கு சிறப்பாக விளையாட வில்லை. இந்த முறை தனது வாய்ப்புகளை சரியாக பயன் படுத்தி வருகிறார் நிதிஷ் ராணா.

நிதிஷ் ராணா முதலில் டெல்லி அணியில் தான் விளையாடி வந்தார் அப்பொழுது கம்பீர் தான் அந்த அணியின் கேப்டன் ஆக இருந்தார்.

கம்பீர் தலைமையில் விளையாடிய பொது தான் அவர் எனக்கு முழு தைரியத்தையும் ஆதரவையும் அளித்தார் நான் இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடி வர கம்பீர் தான் காரணம் அவருக்கு என் முழு நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன், என நிதிஷ் ராணா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.