ரஞ்சி கோப்பை : தமிழகம் முன்னிலை, காலிருதியை நோக்கி டெல்லி

ரஞ்சி கிரிக்கெட் தொடரில் தமிழகம்- மத்தியபிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (சி பிரிவு) இந்தூரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த மத்தியபிரதேச அணி தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 264 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தமிழகம் தரப்பில் கே.விக்னேஷ் 4 விக்கெட்டுகளும், முகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி, ஈஷ்வர் பாண்டே, புனீத் டேட் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதுடன், 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் கேப்டன் அபினவ் முகுந்த் (5 ரன்), வாஷிங்டன் சுந்தர் (9 ரன்) ஒற்றை இலக்கில் வீழ்ந்ததும் அடங்கும். இதன் பிறகு விக்கெட் கீப்பர் ஜெகதீசனும், ஆல்-ரவுண்டர் யோ மகேசும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பின்னர் 62 ரன் முன்னிலையில் ஆல் அவுட் ஆனது தமிழக அணி

இரண்டாவது துவங்கியுள்ள மத்திய பிரதேச அணி 80 ரன் முன்னிலையில் உள்ளது.

மற்றோர் போட்டியில்,

ரஞ்சி டிராபி தொடரின் 6-வது லீக் ஆட்டம் நேற்றுமுன்தினம் (17-ந்தேதி) தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி – மகாராஷ்டிரா அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி முதல் இன்னிஙசில் 419 ரன்கள் குவித்தது. நிதிஷ் ராணா 174 ரன்களும், ரிஷப் பந்த் 99 ரன்களும் சேர்த்தனர். மகாராஷ்டிரா அணி சார்பில் பச்சவ் 4 விக்கெட்டும், குரானா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.


டெல்லி பந்து வீச்சாளர் சைனி

அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய மகாராஷ்டிரா 99 ரன்னில் சுருண்டது. இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், சைனி, மனன் ஷர்மா மற்றும் லலித் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

99 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆன மகாராஷ்டிரா 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 2-வது இன்னிங்சில் மகாராஷ்டிரா 259 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் டெல்லி இன்னிங்சிஸ் மற்றும் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் சைனி, விகாஸ் மிஷ்ரா தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் டெல்லி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.


சதம் அடித்த கேரள வீரர் சஞ்சு சாம்சன்

சவுராஷ்டிரா அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கேரளா. முதல் இன்னிங்சில் 68 ரன்கள் சேர்த்த சஞ்சு சாம்சன், 2-வது இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார்.

Editor:

This website uses cookies.