சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் முதல் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் வீரர்கள் வரை கிரிக்கெட்ட்டை நேசித்து வாழ்கின்ற பலர் ஓய்வு பெற்ற் அபின்னர் கிரிக்கெட் தொடர்பான ஏதோ ஒன்று தான் செய்து வருகின்றனர். கோச்சிங் செய்வது, கமென்ட்ரி செய்வது, நடுவர் ஆவது என ஏதோ ஒரு கிரிக்கெட் தொடர்பான வேலைகளில் தான் பலர் ஈடுபடுகின்றனர்.
அதனையும் தான் தங்களது ஆசைகளைத் தீர்க்க பலர் பல்வேரு பிடித்தமான தொழில் அல்லது வேறு விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 10 வீர்ரகள் ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் எனப் பார்ப்போம்.
1.ஆன்ட்ரூ ஃப்லின்டாஃப் – தொழில் முறை பாக்சிங்
இங்கிலாந்து அணிக்காக எப்போதும் ஆக்ரோஷ்மாக ஆடி வந்தவர் ஃப்லின்டாஃப். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 3845 ரன்னையும் 226 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். ஓய்வு பெற்ற பின்னர் தோழில் மறை பாக்சிங்கில் களம் இறங்கினார். அதிலும் சிறப்பு என்னவென்றால் அவருடைய முதல் பாக்சிங் போட்டியிலேயே இது வரை தோல்வியை சந்திக்காக அமெரிக்க வீரர் ரிச்சர்ட் டாவ்சனை வீழ்த்தினார்.