22வயது இளைஞனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை

ஜூன் 27ஆம் தேதியில் டெல்லி அருகே சப்ஸி மண்டி பகுதியில் ஒரு 22 வயதான இளைஞனை இரண்டு நபர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்து விட்டார்கள்.

நடந்தது என்ன ?

ஹிந்துஸ்தான் பத்திரிகையில் குறிப்பிட்டது என்னவென்றால்,காவலர்கள் என்ன கூறினார்கள் என்றால், ஜூன் 27ஆம் தேதியில் அங்கட் குப்தா தனது சொந்தக்காரர்கள் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் அப்பொழுது அங்கு தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் போட்டிகள் விளையாடி கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அவர்கள் அங்கட் குப்தா வயிற்றில் பந்து பட்டது அதற்கு அங்கட் குப்தா அந்த சிறுவர்களை அங்கு விளையாடாமல் தூரமாக சென்று விளையாடும் படி கூறினார்.

இதில் இவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது இதனால் அங்கட் குப்தா அந்த சிறுவர்களை அடித்தார் பிறகு அவர் அங்கு இருந்து சென்று விட்டார்.அதற்கு பிறகு அங்கட் குப்தா அவர்களின் சொந்த காரர்கள் வீட்டில் இருந்து திரும்பி கொண்டு இருந்தார் அப்பொழுது அங்கட் குப்தா வருவதை பார்த்து அங்கு விளையாடிய சிறுவர்கள் அந்த ஏரியாவில் இருந்து இரண்டு பேரை அழைத்து வந்தார்கள்.அந்த இரண்டு பெரும் சேர்ந்து அங்கட் குப்தாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்து விட்டார்கள்.

 

“குப்தா அந்த சிறுவர்களில் ஒருவரை அறைந்தார்,இதனால் கோவம் அடைந்த சிறுவர்கள் அங்கு உள்ள இரண்டு நபர்களை அழைத்து வந்து குப்தாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்று விட்டார்கள்”என்று காவலர் கூறியுள்ளார்.

எனினும்,குப்தா அந்த சிறுவர்களை அறைந்ததால் அங்கு இறந்த இரண்டு நபர்கள் குப்தாவை கிரிக்கெட் மட்டையை கொண்டு தலையில் தாக்கியுள்ளார்கள் இதனால் குப்தா மரணம் அடைந்தார்.

“அங்கட் குப்தாவை அவர்கள் கிரிக்கெட் மட்டையை வைத்து தலையில் பலமாக தாக்கினார்கள், இரண்டு முறை அவர் தலையில் அடித்ததால் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார் பிறகு அவர் வாயில் இருந்து ரத்தம் வந்தது உடனே அங்கு இருந்த சிறுவர்கள் ஓடி விட்டார்கள்” என காவலர் கூறினார்.

அங்கு இருந்த நபர்கள் இந்த சம்பவத்தை பார்த்து உடனே காவல் நிலையத்திற்கு விரைந்து சென்றார்கள்,அங்கு இருந்த சிலர் அங்கட் குப்தாவை அடித்தவர்களி துரத்தினார்கள் ஆனால் அவர்கள் தப்பி ஓடி விட்டார்கள்.

பிறகு அங்கட் குப்தாவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள் ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

“அவர் தலையில் பலமாக தங்கியதால் அவர் இறந்து விட்டார்” என மருத்துவர்கள் கூறினார்கள்.

பிறகு காவலர்கள் அவர்கள் மீதி வழக்கு பதிவு செய்தது.அங்கட் குப்தாவின் உடலை அவர்கள் குடும்பத்தில் வாங்கி சென்றர்கள்.

அங்கட் குப்தாவை கொன்று விட்டு தப்பி ஓடிய இரண்டு பெரையும் காவலர்கள் பிடித்தார்கள்,அந்த இரண்டு நபர்களை காவலர்கள் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளார்கள்.

இந்த சம்பவத்தால் அங்கு இருந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்,இது போன்று சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க காவலர்கள் தான் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.