டி.20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்படும் இந்திய கிரிக்கெட் அணி, நடப்பு டி.20 தொடரை தோல்வியுடன் துவங்கியுள்ளது. அதிலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே வெறித்தனமாக காத்திருந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியுள்ளதால், முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தங்களது ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். அதே போல் நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த மூன்று மாற்றங்களை இந்திய அணி செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புவனேஸ்வர் குமாரை நீக்கிவிட்டு ஷர்துல் தாகூரை இணைக்கவும்
இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பலமுறை இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளார்,ஆனால் இவர் இந்த உலகக் கோப்பைத் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை.
இதன் காரணமாக இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை அவருக்கு பதில் இந்திய அணியில் இணைத்தால் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றிலும் மிக சிறந்த முறையில் விளையாடக்கூடிய ஷர்துல் தாகூர் புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.