ஒரு நாள் தொடர்கான இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஒரு முறை கூட தோல்வியை தழுவாத மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டவர்கள் காயம் அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக ஓய்வு மேற்கொண்டால், அவர்களுக்கு பதில் தகுதியான ஒரு வீரரை இந்திய அணியின் ஆக்டிங் கேப்டனாக நியமிப்பார்கள். அப்படி நியமிக்கும் நபர்களும் தலைமைத்துவ பண்பை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மற்ற அணிகளை விட இந்திய அணியில் ஒரு அணியை வழிநடத்தக் கூடிய திறமை படைத்த பல வீரர்கள் உள்ளனர் அந்த வரிசையில் ஒரு நாள் தொடர் கேப்டனாக பொறுப்பேற்று ஒருமுறை கூட தோல்வியை தழுவாத மூன்று வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
அணில் கும்ப்ளே.
இந்திய அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகள் கேப்டனாக செயல்பட்ட அணில் கும்ப்ளேவிர்க்கு 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கங்குலி இடம்பெறாததால் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தத் தொடரில் அணில் கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது. அதில் அணில் கும்ப்ளே தன்னுடைய அபாரமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணி சிம்மா சொப்பனமாக திகழ்ந்தார். இந்த தொடரின் வெற்றியின் மூலம் அணில் கும்ப்ளே, ஒரு நாள் தொடரின் கேப்டனாக செயல்பட்டு வெற்றியை மட்டுமே சுவைத்த கேப்டன் என்ற வரிசையில் இடம் பெற்றுள்ளார்.