இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவிற்கும் ஓய்வு வழங்கப்பட்டதால், முதல் போட்டிக்கான இந்திய அணியின் பல இளம் வீரர்களைக் கொண்ட படையால் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது ஆனால் நியூசிலாந்து அணியை வெல்ல முடியாமல் போட்டி டிராவில் முடிந்தது.
இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இடம்பெறுவதால் 3 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலை உள்ளது.
அஜிங்கியா ரஹானே
இந்திய அணி டெஸ்ட் தொடர் போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை என்றால் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடிய திறமை படைத்த இந்திய அணியின் முன்னணி வீரர் அஜிங்கியா ரஹானே சமீப காலமாக நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகளில் தனது பங்களிப்பை கொடுக்கவில்லை.
பல போட்டிகளில் வாய்ப்பளித்தும் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தவில்லை என்பதாலும் விராட் கோலியின் வருகை காரணமாகவும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இவருடைய இடம் பறிபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.