உலகக்கோப்பையில் தங்களது இடத்திற்காக காத்திருக்கும் 7 வீரர்கள் !!

உலகக்கோப்பையில் தங்களது இடத்திற்காக காத்திருக்கும் 7 வீரர்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு அணியும் உலகக்கோப்பைக்கான தங்களது அணியை தீவிரமாக தயார் படுத்தி வருகின்றன.

உலகக்கோப்பையில் விளையாடியே தீர வேண்டும் என்ற கொள்கையை கொண்ட ஒவ்வொரு வீரர்களும் உலகக்கோப்பையில் கிரிக்கெட் தொடரில் தங்களுக்கான இடங்களை பிடித்தே தீர வேண்டும் என்பதற்காக தீவிரமான பயிற்சியிலும், கடும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தங்களுக்கான இடம் கிடைக்குமா கிடைக்காதா என்ற குழப்பமான நிலையில் இருக்கும் நிலையற்ற 7 வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

7; உமேஷ் யாதவ்;

இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்திய ஒருநாள் அணியில் சமீபத்தில் தான் ரீ எண்ட்ரி கொடுத்தார், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்திய அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை உமேஷ் யாதவ் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தான் கூற வேண்டும், சமீபத்தில் நடைபெற்ற அனைத்து தொடர்களிலும் கடுமையாக சொதப்பிய உமேஷ்  யாதவ் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தேவையே இல்லை என்று ரசிகர்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின் மூலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

6; ரவீந்திர ஜடேஜா;

சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா, சமீபத்தில் நடைபெற்ற தொடரில் ஓரளவிற்கு தனது பங்களிப்பை சரியாக கொடுத்திருந்தாலும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு ஒரு போட்டியில் கூட பெரிதாக செயல்படவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

5; விஜய் சங்கர்;

இளம் வீரரான விஜய் சங்கர் சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், இக்கட்டான பல நேரங்களில் தனது பங்களிப்பை சரியாக செய்வதே இல்லை என்பதே உண்மையாகும். விஜய் சங்கருக்கான இடம் தற்பொழுது வரை உறுதி செய்யப்படவில்லை.

4; ரிஷப் பண்ட்;

அடுத்த தோனியே இவர் தான் என்ற மிகப்பெரும் புகழோடு இந்திய அணியில் எண்ட்ரீ கொடுத்த ரிஷப் பண்ட், சிறப்பாக விளையாடிய போட்டிகள் மிக சொற்பமே. பேட்டிங்கில் சொதப்புவது மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வருவதால் இந்த உலகக்கோப்பையில் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே.

3; தினேஷ் கார்த்திக்;

இந்திய அணியின் அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என்று உறுதியாக கூற முடியாத நிலையிலேயே உள்ளார். ஒருவேளை இந்திய கிரிக்கெட் வாரியம் ரிஷப் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்காது.

2; கே.எல் ராகுல்;

இவர் நல்ல வீரரா, இவர் இந்திய அணிக்கு தேவைதானா என்ற குழப்பத்தில் ரசிகர்களை எப்பொழுதும் வைத்து கொள்ளும் அளவிற்கு கே.எல் ராகுல் ஒரு தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அதற்கு அடுத்த தொடரிலேயே கடுமையாக சொதப்பி வருகிறார். இதனால் இந்திய அணியில் இவருக்கான இடமும் கேள்விக்குறியே.

1; அம்பத்தி ராயூடு;

இந்திய அணியில் நீண்ட காலமாக நிலவி வந்த மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்க வந்த மகராசனே வருக வருக என்னும் மிகப்பெரும் வரவேற்போடு இந்திய அணியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரீ எண்ட்ரீ கொடுத்த அம்பத்தி ராயூடு சமீபத்தில் நடைபெற்ற தொடர்களில் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சரியாக செயல்படவில்லை. எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் இவர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியில் இவருக்கான இடம் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.

 

Mohamed:

This website uses cookies.