வீடியோ : ஸ்டம்பின் மீது பந்து பட்டும், பெயில்ஸ் விழாத்தால் எஸ்கேப் ஆனாது டி காக்!!

South African batsmen Quinton de Kock plays the shot during the 3rd ODI match at the Buffalo Park, in East London, on October 23, 2017. / AFP PHOTO / MICHAEL SHEEAN (Photo credit should read MICHAEL SHEEAN/AFP/Getty Images)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் விளையாடிய வீரர்களே இதிலும் தொடர்கிறார்கள்.

 

தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டுபிளிசிஸ், டிவில்லியர்ஸுக்கு பதிலாக, தப்ரைஸ் ஷம்ஷி, கயா ஸோண்டா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் கயா ஸோண்டாவுக்கு இதுதான் முதல் போட்டி. தப்ரைஸ் ஷம்ஷி ’சைனாமேன்’ வகை பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அணியை இளம் வீரர் மார்க்ரம் வழிநடத்துகிறார்.

தென்ஆப்பிரிக்க அணிக்கு புதிய கேப்டன்

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியன் ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், முதலாவது ஆட்டத்தில் பீல்டிங்கின் போது கை விரலில் காயமடைந்தார். பரிசோதனையில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் எஞ்சிய தொடரில் இருந்து அவர் விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஆச்சரியம் அளிக்கும் வகையில் 23 வயதான எய்டன் மார்க்ராம், எஞ்சிய 5 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். மார்க்ராம் இதுவரை இரண்டு ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். கிரேமி சுமித்துக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவின் இளம் கேப்டன் இவர் தான். ஜூனியர் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்.

ஏற்கனவே ‘அதிரடி நாயகன்’ டிவில்லியர்ஸ் காயத்தால் ஒதுங்கிய நிலையில், பிளிஸ்சிஸ்சும் வெளியேறி இருப்பது தென்ஆப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய அணிக்கு சாதகமான விஷயம். தொடக்க ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டினர். பேட்டிங்கில் கேப்டன் கோலியின் சதமும், ரஹானேவின் அரைசதமும் வெற்றியை சுலபமாக்கியது. அதே உத்வேகத்துடன் செயல்பட்டால், தென்ஆப்பிரிக்காவுக்கு மறுபடியும் ‘தண்ணி’ காட்டலாம்.

Editor:

This website uses cookies.