போன வருசம் ஓழங்க பவுலிங் பண்ணதே ஒருத்தர் தான்… இப்ப அவரும் இல்ல; சென்னை சூப்பர் கிங்ஸிற்கு பிரச்சனை உறுதி; ஆகாஷ் சோப்ரா கணிப்பு
கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த மதீஷா பதிரானா எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் இருந்து விலகியுள்ளது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த 16 வருடமாக ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் 22ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.
கடந்த தொடரில் சென்னை அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்த டீவன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை போன்றே, மற்றொரு முக்கிய வீரரான மதீஷா பதிரானாவும் காயம் காரணமாக சென்னை அணியின் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மதீஷா பதிரானா விளையாடாவிட்டால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிச்சயமாக பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “பதிரானா காயம் அடைந்துள்ளார் என்பதை இலங்க்மை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. அவர் விளையாடுவாரா இல்லையா என்பது உறுதியாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் ஒரு சில போட்டிகளில் விளையாடாவிட்டாலும் அது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதே எனது கருத்து. ஏனெனில் பதிரானா சென்னை அணியின் மிக முக்கிய டெத் ஓவர் பந்துவீச்சாளர். அவர் விலகினால் சென்னை அணிக்கு சிறிய பிரச்சனை உறுதி” என்று தெரிவித்தார்.
2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி;
தோனி, மொய்ன் அலி, தீபக் சாஹர், துசார் தேஸ்பாண்டே, சிவம் துபே, ருத்துராஜ் கெய்வ்காட், ராஜவர்தன் ஹங்ரேக்கர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மந்தல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரானா, ரஹானே, ஷேக் ரசீத், மிட்செல் சாட்னர், சிம்ரஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலன்கி, மதீஷா தீக்ஷன்னா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாகூர், டேரியல் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவானிஸ் ரா ஆர்வேலி.